வலி நிவாரணி.. வாழ்வை தொலைத்தவர்களுக்கு மீட்டுக்கொடுக்கும் பிசியோதெரபிஸ்டுகள்.. சசிகலா வாழ்த்து
சென்னை: உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துக்கள் என்று சசிகலா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயன்முறை மருத்துவம்' எனப்படும் பிசியோதெரபி மையங்கள் இன்றைக்கு அதிகரித்து விட்டன. எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் பிசியோதெரபி உதவும். கை, கால்களில் வலி, தசை பிடிப்பு, முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவைகளுக்கு பிசியோதெரபி சிறந்த சிகிச்சை முறையாக உள்ளது.

வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை. உலக பிசியோதெரபி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சசிகலா தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று சேவையாற்றுகின்ற பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் வகையிலும், நாள்பட்ட வலி நிவாரணிகளை வழங்குவதிலும் பிசியோதெரபிஸ்டுகள் ஆற்றுகின்ற முக்கிய பங்கீனை அங்கீகரிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் பல்வேறு உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications