டிடிஎஸ் தொகையை முறையாக செலுத்தாத வழக்கு.. நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மேலும் நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக வருமான வரித்துறை பலமுறை நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் அவர் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து வருமான வரி துறை சார்பில் எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை சார்பில் டிடிஎஸ் தொகையை செலுத்தாத நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி, இதுதொடர்பாக விஷால், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்
ஆனால் நடிகர் விஷால் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications