சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்!
Recommended Video

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் அடுத்த வாரம் தண்ணீர் வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டன. இதனால் மக்கள் தண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் அலைகின்றனர். விவசாயக் கிணறுகள், கல்குவாரியில் இருக்கும் நீரை கொண்டு வந்து தண்ணீர் தேவையை தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர்
எடுத்து வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
இதற்காக ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சென்ற அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் ஆய்வு நடத்தினர்.
ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி, பார்சம் பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரெயில்வே கேட் அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளை 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு பரிந்துரையின் பேரில், ரெயில்வே நிர்வாகம் குடிநீர் எடுத்து செல்ல இதுவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் எடுக்கும் பணிகள் நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கப்படவுள்ளது என தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications