240 மில்லியன் மக்களின் உயிர்.. இந்தியா ரெட் லைனை கிராஸ் செய்துவிட்டது.. பாகிஸ்தான் தளபதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ரெட் லைனை இந்தியா தாண்டிவிட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் விடுத்த எச்சரிக்கையில் தண்ணீர் என்பது பாகிஸ்தானின் வாழ்வாதாரம். 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இது. அவர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அதை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்வது. பாகிஸ்தானின் அஸ்திவாரம் அதை நம்பி இருக்கிறது.

பாகிஸ்தான் போட்ட சிவப்பு கோடுதான் தண்ணீர் என்பது. அந்த சிவப்பு கோட்டை இந்தியா தாண்டிவிட்டது. இந்திய மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தண்ணீர் என்பது பாகிஸ்தானின் சிவப்புக் கோடு, மேலும் 240 மில்லியன் பாகிஸ்தானியர்களின் இந்த அடிப்படை உரிமையில் எந்த சமரசத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்தியா தண்ணீரை ஆயுதம் போல பயன்படுத்துகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச விதிகளை, ஒப்பந்தங்களை மீறி செயல்படுகிறது. இந்தியா இந்த பிராந்தியத்தின் அமைதியை குலைக்கும் விதமாக செயல்படுகிறது என்று அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Water is the Red Line for us India crossed it says Pakistan Army Chief Asim Munir

கடுமையான எச்சரிக்கை

முன்னதாக எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.

அவரின் இந்த ஆணவமான பேச்சு, இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு அலைகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி பேசிய இந்த கருத்துக்கள் தீவிரவாதி ஹபீஸ் சயீத் பேசிய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றன. ஹபீஸ் சயீத் இதேபோல் இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால்.. நாங்கள் பாதிக்க மாட்டோம். இந்தியாதான் அதன் விளைவுகளை சந்திக்கும், கடுமையான விலைகளை சந்திக்கும்.. இந்தியர்கள் உயிரை விட வேண்டி இருக்கும் என்று கூறி இருந்தார்.

அதே கருத்தை இப்போது அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் - தீவிரவாத அமைப்பு இரண்டும் ஒரே மரத்தில் செல்லும் இரண்டு கிளைகள், இரண்டிற்கும் வேறுபாடு எல்லாம் இல்லை என்று சொல்வது வழக்கம் . அதை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு தீவிரவாதி சொன்ன அதே கருத்தை சொல்லி இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் எல்லாம் இதை கண்டும் காணாமல் உள்ளது.

பாகிஸ்தான் உடன் 1960 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது.

மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இந்த செனாப் நதி பாய்கிறது. இது 3 வாரங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு ஓடுகிறது.

வற்றிய நதிகள்

1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+