மெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கன மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
Recommended Video
இன்னொரு பக்கம் பார்த்தால், மயிலாப்பூர் உட்பட பல ஏரியாக்களில் சாலைகளில், முட்டி வரை தண்ணீர் ஓடிக் கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.
நேற்று இரவு முதல் பெய்த கனமழை தான் இதற்கு காரணம். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி கூறியதை பாருங்கள்:

எந்த நகரமாக இருந்தாலும்
சென்னை நகரத்தில், 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது மழை. மழை தண்ணீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான். சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம்.

மெரினா கடற்கரை
மேலும் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மழைநீரால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சென்னை வெள்ளம்
2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரிய பள்ளம் புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மிகப்பெரிய மழை பெய்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதந்தது. விமானப் படை வந்து உணவு பொட்டலங்கள் போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த வெள்ள பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்தனர்.

மெரினா பீச் வெள்ளம்
இதன்பிறகு 2017ம் ஆண்டு சென்னையில் நல்ல மழை பெய்தது. முந்தைய வெள்ளம் போல மிகப்பெரிய மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், பல பகுதிகளில், குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. அந்த காலகட்டத்தில் மெரினா கடற்கரையில் மழைநீர் தேங்கியது. இதற்கு பிறகு இன்று ஒரே நாள் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக மெரினா கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பெரிய மழை
அது மட்டும் கிடையாது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய மழை பெய்தது இதுதான் முதல் முறை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவிக்கிறார். நகரின் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 100 முதல் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பதை, அவர் சுட்டிக்காட்டுகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications