ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்.. கூட்டிக் கழிச்சு பார்த்தா இந்த தண்ணியும் நம்ம சென்னைக்கு பத்தாதாமே!
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்தாலும் நம்ம சென்னையின் தாகத்தை தீர்க்க முடியாத அளவுக்கு வறட்சியின் பிடியில் தலைநகர் உள்ளதாக வேதனை தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சியும் நிலவி வந்தது.
சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்த ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டதால் 40 சதவீதம் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளும் தண்ணீர் கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கின.

துரிதம்
இதையடுத்து ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் மேட்டூர் அணை தண்ணீர் வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ 65 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

ரயில்வே துறை
முதல் 50 பெட்டிகளில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நேற்று சென்னையை வந்தடைந்தது. இது போல் 4 நடை வீதம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் தண்ணீர் சென்னைக்கு வந்தடையும். இதற்காக அரசு ஒரு நாளைக்கு ரூ 32 லட்சத்தை ரயில்வே துறைக்கு செலுத்துகிறது.

குறைந்தபட்சம்
இந்த தண்ணீர் நிச்சயம் சென்னைக்கு மக்களுக்கு போதாது என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு சென்னைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அரசு வரவழைப்பதோ 10 மில்லியன் லிட்டர். எனினும் வரும் நவம்பர் மாதம் வரை, அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

பூர்த்தி
சென்னை மக்களின் ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை காட்டிலும் 2 சதவீதம் குறைந்த அளவிலான நீரே ரயில் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது எப்படி சென்னையின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் வேதனை
மேலும் சிறப்பு ரயில்களின் நீராதாரமான மேட்டூர் அணையிலும் சராசரி தண்ணீர் அளவை காட்டிலும் பாதி அளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் மக்களின் தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது. எனவே ரயில்மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்தால்தான் ஓரளவுக்கு பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனம். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு டேங்கர் லாரி ரூ. 2000 கட்டணமாக பெற்ற நிலையில் தற்போது அந்த கட்டணம் 5000 ரூபாய் ஆகியுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்... பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications