ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்.. கூட்டிக் கழிச்சு பார்த்தா இந்த தண்ணியும் நம்ம சென்னைக்கு பத்தாதாமே!
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்தாலும் நம்ம சென்னையின் தாகத்தை தீர்க்க முடியாத அளவுக்கு வறட்சியின் பிடியில் தலைநகர் உள்ளதாக வேதனை தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சியும் நிலவி வந்தது.
சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்த ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டதால் 40 சதவீதம் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளும் தண்ணீர் கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கின.

துரிதம்
இதையடுத்து ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் மேட்டூர் அணை தண்ணீர் வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ 65 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

ரயில்வே துறை
முதல் 50 பெட்டிகளில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நேற்று சென்னையை வந்தடைந்தது. இது போல் 4 நடை வீதம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் தண்ணீர் சென்னைக்கு வந்தடையும். இதற்காக அரசு ஒரு நாளைக்கு ரூ 32 லட்சத்தை ரயில்வே துறைக்கு செலுத்துகிறது.

குறைந்தபட்சம்
இந்த தண்ணீர் நிச்சயம் சென்னைக்கு மக்களுக்கு போதாது என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு சென்னைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அரசு வரவழைப்பதோ 10 மில்லியன் லிட்டர். எனினும் வரும் நவம்பர் மாதம் வரை, அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

பூர்த்தி
சென்னை மக்களின் ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை காட்டிலும் 2 சதவீதம் குறைந்த அளவிலான நீரே ரயில் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது எப்படி சென்னையின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் வேதனை
மேலும் சிறப்பு ரயில்களின் நீராதாரமான மேட்டூர் அணையிலும் சராசரி தண்ணீர் அளவை காட்டிலும் பாதி அளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் மக்களின் தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது. எனவே ரயில்மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்தால்தான் ஓரளவுக்கு பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனம். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு டேங்கர் லாரி ரூ. 2000 கட்டணமாக பெற்ற நிலையில் தற்போது அந்த கட்டணம் 5000 ரூபாய் ஆகியுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications