ஆளுநரே.. உங்க கோபத்தை ரசிக்கிறோம்.. களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கையே :எம்.பி அட்டாக்
சென்னை : களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்த நிலையில், ஆளுநரின் கருத்தை விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன்.
தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என அடுத்தடுத்து திமுக அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசுவதால் திமுக அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் இயற்றியது திமுக அரசு.

தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார் ஆளுநர் ரவி. ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்தக் கருத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ரவியின் கருத்துகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.

சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,
"திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.
மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.
பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்
என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே!
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம்.
உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications