234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த போகிறோம்.. வண்ணாரப்பேட்டை போலீசுக்கு வந்த மிரட்டல் கடிதம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த உள்ளதாக சென்னை வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மர்ம மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நடத்தியதை தொடர்ந்து இப்போது தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தச் சூழலில் சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில் " அல் ஹக்' என்ற பெயரில் ஒரு இயக்கம் செயல்படுகிறது. இந்த இயக்கத்தில் 250 பேர் உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது, அதை மீறி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து 234-எம்.எல்.ஏ-க்களைக் கடத்துவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார், உடனடியாக தங்களது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. மொட்டையாக அனுப்பப்பட்ட இந்த கடித விவகாரம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சிஏஏவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது . இந்த போராட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்த சூழலில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்களை கடத்துவோம் என்று வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications