சோதனை முடியும் வரை வைகுண்டராஜனை வெளியே விட முடியாது.. வருமான வரித்துறை
சோதனை முடியும் வரை வைகுண்டராஜனை வெளியே விட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: வைகுண்டராஜனை சோதனை முடிவடையும் வரை வெளியே விடபோவதில்லை என்று வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வி.வி.மினரல்ஸ் உரிமையாளரான வைகுண்டரானுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தினார்கள். இன்று 2-வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. கடற்கரையோரம் உள்ள மணலில் தாதுக்களை பிரித்து எடுத்து ஏற்றுமதி செய்யும் தொழிலைதான் பிரதானமாக வைகுண்டராஜன் செய்து வருகிறார்.

வரி ஏய்ப்பு?
இதற்கான தலைமை அலுவலகம் திசையன்விளையில் உள்ளது. இந்த தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில், தடையை மீறி தாது மணல் ஏற்றுமதியை அவர் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்கொண்ர்வு மனு
இதனிடையே, வருமான வரி சோதனை தொடங்கி ஒருநாள் முடிவடைந்தும், வைகுண்டராஜனை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வைகுண்டராஜனை, நெருங்கிய உறவினர்கள் சந்திக்க அனுமதி வேண்டும் என்றும் அவரது சம்பந்தி காமராஜ் சார்பில் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று செய்யப்பட்டது.

கைது செய்யவில்லை
இதை அவசர வழக்காக கருதி நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் பதிலளித்தார். அதில், "வைகுண்டராஜனை யாரும் கைது செய்யவில்லை, அவர் தன்னுடைய வீட்டில் சுதந்திரமாகத்தான் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு
ஆனால் அதே நேரத்தில் நெருங்கிய உறவினர்கள் வருமான வரியின் சோதனைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அவரை சந்திக்கலாம் என்றும், இன்றோ அல்லது நாளையோ இந்த வருமான வரி சோதனை முடியும் வரை அவரை வெளியே அனுமதிக்க முடியாது என்றும் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications