ஆரஞ்சு அலர்ட்.. இன்று 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.. மிக கன மழை பெய்ய போகிறது!
சென்னை: இன்று தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்து வருகிறது. கிழக்கு காற்றும் கனமழைக்கு காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி பொதுவாக கடலுக்கு மேலே இருந்தால் மழை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் தரைக்கு மேல் இருந்தால் மழை மிக அதிகமாக இருக்கும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு தரைக்கு மேலே 5-9 கிமீ உயரத்தில் இருந்தது. இதுதான் சென்னையில் மிக அதிக கனமழையை ஏற்படுத்தியது. நேற்று முதல்நாள் திடீரென சென்னையில் அதிக அளவில் மழை கொட்டி தீர்க்க இதுவே காரணமாக அமைந்தது. ஆனால் சென்னை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்த கருவிகளை வைத்து இதை கணிக்க முடியவில்லை.

சென்னை வானிலை மையம்
தரைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை சென்னை வானிலை மைய அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது/

மிக கனமழை
இந்த மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையில் இருந்து மிக அதிக கனமழையை எதிர்பார்க்கலாம். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 கிமீ என்ற அளவில் இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications