சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடைக்கு இடையே குட்நியூஸ்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் மழை பெய்யப்போகும் இடங்கள்

    தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அசானி புயல், கரீம் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். ஆனால் இந்த முறை மே 26 -25 நாட்களில் பருவமழை தொடங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமாகோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா

    மழை

    மழை

    இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று காலை ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

    இன்று மழை

    இன்று மழை

    அசானி புயல் ஆந்திராவிற்கு சென்ற நிலையில், தமிழ்நாட்டிலும் லேசான மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழை பெய்து வருகிறது. வடதமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக இதனால் மழை பெய்து வருகிறது. நேற்றும் சென்னையிலும் மற்ற சில வட மாவட்டங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில்

     11 மாவட்டங்கள்

    11 மாவட்டங்கள்

    தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

     நாளை மழை

    நாளை மழை

    நாளை, 15.05.2022, 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் நேற்றை விட குறைவான வேகத்திலேயே காற்று வீச கூடும்.

    English summary
    Weather Report: 11 Districts in Tamil Nadu to get rain amid the summer. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X