கொளுத்தப் போகுது வெயில்.. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் செம்ம மழை.. வானிலை மையம்
சென்னை: வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர வேறு எங்கும் மழை பெய்யவில்லை.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதனால் அடுத்த இரு தினங்களுக்கு பதிவாகும் என்பதால் அடுத்துவரும் இருதினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11: 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் தௌிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவகோனம், கலியால் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும், சூரலகோடு, சித்தாரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications