கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் குளுகுளு அறிவிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தில் எல்லா பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்ற போதிலும் இன்றும் நாளையும், நீலகிரி ,தேனி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சித்திரை பிறந்ததில்இருந்து தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. அத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

நேற்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. மதுரை, சேலம், திருத்தணி பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி, திருநெல்வேலி, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் வெயில் 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரையும் கொளுத்தும் என்பதால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. சென்னையில் அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை காணப்படும் குறைந்த பட்சம் 81 டிகிரி வெப்ப நிலை காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications