இதுதான் ஹாட் ஸ்பாட்.. அடுத்த 4 நாட்களுக்கு என்ன நடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டை தாக்கிவிட்டன. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.

    வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் தீவிரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வானிலை குறித்து சென்னை வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.

     தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் டிசம்பர் 1 வரை விட்டு விட்டு மழை பெய்யும். ஆனால் சென்னையில் மோசமான மழை என்பது முடிந்துவிட்டது. பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    12000 கன அடி

    12000 கன அடி

    பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 3100 கன அடியாக உள்ளது. அடையாருக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் நீர் வரவில்லை. ஆதனூர் உட்பட மற்ற பகுதிகளில் இருந்தும் இதற்கு நீர் வரத்து உள்ளது.

     தென் தமிழ்நாடு

    தென் தமிழ்நாடு

    தென் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடுத்த 2 நாட்களுக்கு ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். மாஞ்சோலையில் மழை அளவை கண்காணிக்க வேண்டும். மணிமுத்தாறு மட்டுமே இந்தவருடம் இதுவரை நிரம்பவில்லை. இன்னும் 2-3 நாட்களில் அதுவும் நிரம்பிவிடும். கேரளா அருகே அரபிக்கடலில் தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.

    மழை

    இதனால் கேரளாவில் அடுத்த 1 -2 நாட்களுக்கு மழை இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2-3 நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இது வலுவாக இருந்து புயலாக மாறினால் ஆந்திரா நோக்கி செல்லும்.

    வீக்

    வீக்

    இது வலிமை குறைந்து வீக்காக இருந்தால் மீண்டும் வடதமிழ்நாட்டிற்கு வந்து சேரும். இப்போது வரை இது மத்திய அல்லது மேற்கு ஆந்திராவை தாக்கும் என்றே கணிப்புகள் சொல்கின்றன. இன்னும் நேரம் இருக்கிறது. தெளிவான புள்ளிகள் கிடைத்தபின் அப்டேட் செய்யப்படும். இது மட்டுமா ஆந்திராவிற்கு என்றால் அதோடு ஈரப்பதமும் செல்லும் என்பதால் நமக்கு மழையில் இருந்து பிரேக் கிடைக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+