கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்! சதர்ன் ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு..!
சென்னை: கோடை விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது
இருந்து தற்போது கோடை விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஜூன் 29ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனுர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். அதன்படி மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 9.30க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06041) அன்றைய தினம் மாலை 5.25க்கு கோயம்புத்தூர் பிரதான ரயில் நிலையம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.15க்கு புறப்படும் சிறப்பு ரயிலானது (06042) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.55க்கு மங்களூர் சென்ட்ரல் சென்றடையும். அதன்படி மங்களூர் சென்ட்ரலில் இருந்து வரும் மே 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண். 06041 அதே நாள் மாலை 5:25 மணிக்கு கோவையை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து வருகின்ற 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண் 06042 மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகள் அமரும் வசதியுடன் ஒருங்கிணைந்த முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்" என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications