Pongal 2026: பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன வழங்கப்படுகிறது? லிஸ்ட் இதோ! ஹாட்ரிக் அடித்த ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் பயன்பெறுவர். இந்த பரிசு தொகை+ பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியன ரூ 6936 கோடி செலவில் வழங்கப்படுகிறது.
தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்குகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரையுடன் தலா ரூ.1,000 ரொக்கப்பணமும் பொங்கல் தொகுப்பில் சேர்க்கப்பட்டன.

முன்னதாக, நிதி நெருக்கடியால் ரொக்கப்பணம் வழங்கப்படாத நிலையும் இருந்தது. எனினும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரொக்கப்பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலா ரூ. 5,000 வழங்கக் கோரியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.248 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ரூ.248 கோடி ஒதுக்கீடு, அரிசி மற்றும் கரும்பு கொள்முதல் செய்யவே. 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க ரூ.2,000 கோடி நிதி தேவை. இதனால் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் ரொக்க பரிசாக ரூ 3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில் என்னென்ன கொடுக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
- 1 கிலோ பச்சரிசி
- 1 கிலோ சர்க்கரை
- 1 முழுக் கரும்பு
- இலவச வேட்டி, சேலை
- ரூ 3000 ரொக்கம்
இவையெல்லாம் வழங்கப்படுகிறது. எனவே இந்த பொங்கல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான பொங்கலாக அமையும் என்கிறார்கள். இந்த பரிசுப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விரைவில் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகைதான் கடந்த காலங்களில் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட ரொக்கத்திலேயே அதிகமான தொகை என்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 3 விஷயங்களை ஸ்டாலின் செய்துவிட்டார்.
ஒன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. அடுத்து ஹாட்ரிக் சிக்ஸராக பொங்கல் பரிசு ரூ 3000 வழங்கப்படுகிறது.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications