அகவிலைப்படி முதல் பொங்கல் பரிசுத் தொகை வரை! சட்டசபையில் ஸ்டாலினின் 9 முத்தான அறிவிப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை விதி எண் 110-இன் கீழ் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் வெளியிட்ட 9 அறிவிப்புகள்:
- அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை 15 நாட்களில் சரண் செய்து அதற்குரிய பணப்பலன்களை பெறும் நடைமுறை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.
- மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ 10 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி பயில வழங்கப்படும் முன்பணம் தொழிற்கல்வி பயில ரூ 1 லட்சமும் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ 50 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ 5 லட்சம் வழங்கப்படும்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ 500-இல் இருந்து ரூ 1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ 4 ஆயிரத்திலிருந்து ரூ 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு
- அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை அவர்களின் தகுதிக்கான பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு 9 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications