விரக்தியில் விவசாயிகள்.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. டெல்டாவில் தலையெடுக்கும் புது பிரச்சினை!
டெல்டா விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
சென்னை: கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அது விவசாயிகள் தற்கொலை.
அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலைக்குப் போய் விட்டதை நினைத்தும், இருந்ததை எல்லாம் இழந்த துயரத்திலும் விவசாயிகள் சிலர் தற்கொலை முடிவை நாடியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மீண்டு வர முடியும் என்ற எண்ணத்தை எத்தனைதான் ஊட்டினாலும் அவர்களால் இயல்பு நிலைக்கு வர முடியாத நிலை இன்னும் நிலவுவதையே இது காட்டுகிறது என்று உணர முடிகிறது.

வாழ்வாதாரங்கள்
மீள முடியாத சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது காவிரி டெல்டா. மீண்டு வருகிறார்கள் என்ற வார்த்தையெல்லாம் சும்மா ஒப்புக்குத்தான். அவர்கள் முழுமையாக மீள பல வருடமாகும். காரணம், ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தொலைத்து விட்டு நிற்கின்றனர்.

உதவிகள் கிடைக்கவில்லை
மீட்பு நிவாரணப் பணிகள் நடக்கிறது என்றாலும் கூட முழு வீச்சில் இல்லை என்றுதான் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் போதிய அளவிலான உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் இன்னொரு முக்கிய காரணம். இதனால் மக்கள் மனதளவில் நொறுங்கிப் போயுள்ளனர்.

சோகத்தில் மக்கள்
ஏற்கனவே புண்பட்டுப் போயுள்ள அவர்களுக்கு எப்படி மீண்டு வரப் போகிறோம், அரசிடமிருந்து என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்கப் போகிறது, காடு, தோப்பை வைத்து நிறைய திட்டமிட்டோமே. அதையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறோம் என்ற சோகத்தில் மக்கள் பலர் உள்ளனர்.

மனவள ஆலோசனை
இத்தகைய காரணங்கள்தான் பலரை தற்கொலை உணர்வுக்கு இட்டுச் செல்கின்றன. அவர்களுக்கு நிவாரணத்தோடு, மன வள ஆலோசனையும் மிகவும் அவசியமாக தற்போது தேவைப்படுகிறது. போதிய அளவிலான கவுன்சிலிங் கொடுக்கப்பட்டால்தான் அவர்கள் தங்களது துயரத்திலிருந்து மீண்டு வர முடியும்.

குறை சொல்ல முடியாது
யாரையும் இந்த சமயத்தில் குறை சொல்ல முடியாது. குறை சொல்வது எளிது. ஆனால் துன்பத்தில் மூழ்கியிருப்பவர்களை மனதளவில் நம்பிக்கை கொடுத்து மீட்டுக் கொண்டு வர வேண்டியது முக்கியமாகும். அதை அரசு மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து செய்ய வேண்டியது அவசியம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications