Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? ஓபிஎஸ் முன் 'சிறு வெளிச்சம்’.. அது மட்டும் நடந்தா.. ஆட்டம் க்ளோஸ்!

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ் முன்னால் இருக்கும் சிறு வெளிச்சமும் மறைந்துவிடும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுத்த முயன்று வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இதனால், தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இன்னொரு விஷயத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை, எனவே இந்த தீர்ப்பு எங்களுக்கு பாதகம் இல்லை என்று கூறி வருகிறது ஓபிஎஸ் அணி.

பொதுக்குழு செல்லும்

பொதுக்குழு செல்லும்

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய அதிமுக ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கிய நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடி வருகிறது. ஆனால், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்துப் பேசவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அதனை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அந்தத் தீர்மானங்களுக்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடரலாம் என்கிறது ஓபிஎஸ் அணி.

தேர்தல் ஆணையத்தில்

தேர்தல் ஆணையத்தில்

மேலும், இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், தற்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை எந்த விதத்திலும் பாதிக்காது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இந்த வெற்றியை எடப்பாடி பழனிசாமியால் கொண்டாட முடியாது. நாங்கள் சட்டப்படி முறையீடு செய்வோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஓபிஎஸ் தரப்பு. சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி உள்ளது.

என்ன முடிவெடுக்கும்

என்ன முடிவெடுக்கும்

இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் 23ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் இப்படி மனு அளிப்பதால் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கைக்கு எட்டியும்

கைக்கு எட்டியும்

சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காது. எனவே, தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராக ஈபிஎஸ்ஸை தேர்வு செய்யும் ஈபிஎஸ் தரப்பின் முயற்சிக்கு சிக்கல் ஏற்படும். கட்சி தனது கட்டுப்பாட்டில் வந்தாலும், பொதுச் செயலாளர் ஆக முடியாது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்படும்.

ஓபிஎஸ் முன் இருக்கும் வெளிச்சம்

ஓபிஎஸ் முன் இருக்கும் வெளிச்சம்

ஒருவேளை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பிரேயரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னால் இருக்கும் சிறு வெளிச்சமும் மறைந்துவிடும். அதன் பிறகு தேர்தல் ஆணையம் சின்னத்தையும் சிவசேனா வழக்கு போல எடப்பாடி பழனிசாமிக்கே கொடுத்துவிடும்.

 முன்னேற்பாடு

முன்னேற்பாடு

இப்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இருக்கின்றன. இது மட்டும் இடைக்கால பொதுச் செயலாளர் என்று மாறிவிட்டால், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி, சின்னம் எல்லாவற்றையும் ஒப்படைக்கப் போவதற்கான முன்னேற்பாடாகவே கருதப்படும். எனவே தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+