தலைநிமிறுது சென்னை.. இன்னும் சில நாள்தான்.. வேலைகளும் ஆரம்பம்.. மேயர் பிரியா சொன்ன சூப்பர் நியூஸ்
சென்னை: இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையில், வெளியிட்ட மொத்தம் 82 அறிவிப்புகளில், 18 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை மழை வந்தாலே, பீதியும் கலக்கமும் சேர்ந்து மக்களுக்கு வந்துவிடும்.. ஆனால், இந்த கலக்கம் சமீபகாலமாகவே மாறி வருகிறது..

மழை வெள்ளத்தில் சென்னை சூழ்ந்தபோது, மிக பொறுப்புடன் மேயர் பிரியா காட்டிய அக்கறை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.. முக்கியமாக மழைநீர் வடிகால் பணிகளில் வேகம் எடுத்ததுடன், புரட்சிகரமான பட்ஜெட்டையும் முதல் வருடமே சமர்ப்பித்து அசரடித்திருந்தார்.
ரெயின் கோட்: சென்னையில் எப்போது மழை வந்தாலும், முக்கிய சாலைகளில், நள்ளிரவு நேரங்களில், ரெயின் கோட்டுடன் பிரியாவை காண முடியும்.. விடிகாலை நேரமானாலும், அதிகாரிகளுக்கு முன்பே ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவார் பிரியா.. நேரடி ஆய்வுகளாகட்டும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்ததாகட்டும், எல்லாமே ஜரூர் வேகத்தில் நடந்து முடிந்துவிடும்.
எனினும், சென்னையை ஒரு உலுக்கு, உலுக்கிவிட்டு போய்விட்டது அந்த மிக்ஜாம் புயல்.. புயலின் தாக்கத்தின்போது, சென்னையின் நிலைமை படுமோசமாகிவிட்டது.. மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வந்தபோதிலும், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டுவிட்டனர்..
மழை வெள்ளம்: மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னையின் புறநகர்ப்பகுதிகள், முழுமையாக இன்னமும் மீண்டு வரமுடியவில்லை. அதனால், மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் அளவுக்கு அதிகமாகவே மிச்சமிருப்பதாக தெரிகிறது. இவைகளை சரியாக திட்டமிடுவதுடன், இப்போதே அதற்கான பணிகளையும் கையாண்டால்தான், வரும் பருவமழைக்குள் சென்னையை பாதிப்பில்லாமல் மீட்க முடியும். இதற்கான திட்டமிடுதலில் சென்னை மாநகராட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளதாகவே தெரிகிறது..
இந்நிலையில், 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியாவின் அறிவிப்புகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். இந்த துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேயர் பிரியா: அப்போது மேயர் பிரியா பேசும்போது, "சென்னை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் மூலம் 82 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் கல்வித்துறை தொடர்பான 27 அறிவிப்புகளில் 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள 2 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பொது சுகாதாரத்துறை தொடர்பான 8 அறிவிப்புகளில் 3 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 5 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத் துறை தொடர்பான 5 அறிவிப்புகளுக்கான பணிகள், இயந்திரப் பொறியியல் துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, மீதமுள்ள 6 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
பேருந்து சாலைகள்: பேருந்து சாலைகள் துறை தொடர்பான 2 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கிறது. மழைநீர் வடிகால் துறை தொடர்பான 4 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, 3 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. பூங்காத்துறை தொடர்பான 4 அறிவிப்புகளுக்கான பணிகளும், கட்டிடத்துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது.
மொத்தம் 82 அறிவிப்புகளில் 18 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 57 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது" என்றார்..!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications