கருணாநிதி கன்வென்சன் சென்டர்.. என்னென்ன வசதிகள்? முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஐடியா வந்தது எப்படி?
சென்னை : சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் 'கலைஞர் கன்வென்சன் செண்டர்' அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பன்னாட்டு அரங்கத்தில் என்னென்ன அமைந்திருக்கும்?
சென்னை கலைவாணர் அரங்கில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நுற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியீட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் உலகத்தரத்தில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 5 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில், உலகளவில் சிறந்த கூட்டரங்கமாக இது அமையும் என தெரிவித்தார்.
உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக இது அமையும், சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உளகளாவிய வர்த்தக மாநாடுகள், உலக திரைப்பட விழாக்கள், தொழில் மூதலீடு கூட்டங்கள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் , ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் செய்த போது இதை முடிவு செய்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications