நடுவானில்.. சென்னைக்காரருக்கு மாரடைப்பு.. சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் ஷாக்.. பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நோக்கி விமானத்தில் பயணித்த முதியவர் மாரடைப்பால் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோதே ஜெகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தும் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.

ஜெர்மனியின் ஃப்ராங்க ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. பொதுவாக விமானங்களில் அவசர உதவிகள் செய்ய பணிப்பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் முழுமையான சிகிச்சைகளை விமானத்தில் வழங்க முடியாது.

airport chennai

விமானத்தில் மருத்துவர்கள் இருந்தால்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். அதுவே விமானத்தில் மருத்துவர் இல்லாத பட்சத்தில் விமானிகள் இரண்டு விதமான நடவாடிக்கை எடுப்பார்கள். ஒன்று வந்த விமான நிலையத்திற்கே திரும்பி செல்வார்கள். இல்லையென்றால் இறங்க வேண்டிய விமான நிலையம் அருகிலேயே இருந்தால் அங்கேயே தரையிறங்குவார்கள்.

எந்த விமான நிலையத்தின் தூரம் குறைவாக உள்ளதோ அங்கே தரையிறங்குவார்கள். இது எவதுமே இல்லை என்றாலும் எந்த விமான நிலையம் அருகில் உள்ளதோ அங்கே தரையிறங்குவார்கள். விமான பயணம், நேரத்திற்கு செல்வது என்பதை எல்லாம் தாண்டி ஒருவரின் உயிர்தான் முக்கியம் என்பதே விமான பயணத்தின் விதி ஆகும்.

என்ன நடந்தது? இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை நோக்கி விமானத்தில் பயணித்த முதியவர் மாரடைப்பால் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மனியின் ஃப்ராங்க ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. சென்னை நோக்கி பயணித்த ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (92) என்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளார்.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோதே ஜெகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தும் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.

என்ன நடந்தது? அவர் அசௌகரியத்தை உணர்ந்தபோது விமானப் பணிப்பெண்கள் முதலுதவி அளித்து மருத்துவ அவசரநிலை குறித்து விமானியிடம் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் மருத்துவ வசதிகளை செய்யுமாறு விமானி உடனடியாக விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு (ஏடிசி) தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் விரைந்தனர். ஜெகநாதன் நடுவானில் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அவரை சோதனை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. பின்னர் விமான நிலைய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடுவானில் பயணி ஒருவர் இறந்ததால், விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு, பயணிகளை அடுத்த பயணத்திற்கு ஏற்றிச் செல்லுமாறு விமானிகள் அறிவித்தனர். சென்னையில் இருந்து மீண்டும் அந்த விமானம் பிராங்ப்ரூட் சென்றது. அந்த விமானத்தில் சுமார் 196 பயணிகள் ஏறியிருந்தனர், சென்னையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுத்தம் செய்யும் பணிகள் காரணமாக அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+