நெஞ்சு வலி இல்லை! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைப்பட்டால் சோர்வு! மகன் அமீன் விளக்கம்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு காலை முதலே நீர்ச்சத்து குறைபாட்டால் உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்த அவர் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு நலமுடன் இருக்கிறார் என அவருடைய மகன் ஏ.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமீன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பு கொண்ட ரசிகர்கள், நலம்விரும்பிகளுக்கு உங்களது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன்.

அப்பாவுக்கு நீர்ச்சத்து குறைப்பாட்டால் அவர் சோர்வாக இருப்பதாக உணர்ந்தார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
உங்களது அன்பான வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும் அப்பாவின் உடல்நலனை தேற்றின. உங்கள் அனைவருக்குமே நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அமீன் தெரிவித்திருந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து மும்பை வழியாக நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். தூங்கி காலை எழுந்த போதிலிருந்தே அவருக்கு உடலில் அசவுகரியம் இருந்து வந்தது.
இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி என சில தகவல்கள் வந்தன. அதையே ஊடகங்களும் தெரிவித்திருந்தன.
ஆனால் அவருக்கு நெஞ்சு வலி இல்லை என்பது அமீனின் பதிவில் இருந்து தெரிகிறது. அது போல் மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடு திரும்பிய நிலையில் அப்பல்லோ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவருக்கு சோர்வு காணப்பட்டது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். அவருடன் மகன் அமீனும் மகள் இஸ்ரத்தும் சகோதரி ரஹானாவும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பாத்திமா கூறுகையில் தொடர் பயணங்களால் மிகவும் களைப்பாக இருந்தார் ரஹ்மான். அதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு பயப்படும் படியாக உடம்புக்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications