சென்னை டூ பெங்களூர் ஜஸ்ட் 25 நிமிடங்களில்.. புல்லட் ரயில் எல்லாம் ஓரம் போ.. பாயும் ஹைப்பர்லூப்!
சென்னை: தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை டூ பெங்களூர் இடையே வெறும் 25 நிமிடங்களில் செல்லலாம் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது உண்மைதான். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம்.. முக்கிய நகரங்களுக்கு இடையே போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.
இதன் காரணமாகவே அரசு பல்வேறு போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் என்று பல போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர்
சாலைகளைக் காட்டிலும் ரயில்களில் மத்திய அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கிறது. பாதுகாப்பானது, பயணிகளுக்கு ஆகும் செலவும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில்களையே மக்கள் விரும்புகின்றனர். அதன்படி தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை பெங்களூர் இடையே ஏற்கனவே பல ரயில்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் புதிதாக வந்தே பாரத் ரயிலும் சென்னை பெங்களூர் மைசூர் இடையே இயக்கப்படுகிறது.

வெறும் 25 நிமிடங்கள்
இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 4.30 மணி நேரத்தில் செல்ல முடிகிறது. இப்போது இரு நகரங்களுக்கு இடையேயான கனெக்டிவிட்டையே மேலும் விரைவுபடுத்தும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 25 நிமிடங்களில் செல்ல முடியுமாம். ஆமாம், வெறும் 25 நிமிடங்களில் சென்றுவிடலாம். அப்படி என்ன தொழில்நுட்பம் என்று கேட்கிறீர்களா.. அதுதான் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். அது என்ன தொழில்நுட்பம். இதில் இருக்கும் சிறப்புகள், சவால்கள் என்ன என்பதை என்பதைப் பார்க்கலாம்.

டெண்டர்
ஏற்கனவே, மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது இருக்கும் போக்குவரத்து சேவைகளில் புல்லட் ரயில் திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன் அடுத்தகட்டமாக ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் இருக்கும். சென்னை பெங்களூர் இடையே இந்த ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறு ஆய்வை இந்தியன் ரயில்வே மேற்கொள்ளப் போகிறது. இத்திட்டத்திற்கு ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்
அதிவேக போக்குவரத்தின் மகத்துவம் என்று ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் கீழ் வெற்றிட குழாய்க்குள் அமைக்கப்படும். பின்னர் அந்த வெற்றிட குழாய்க்குள் கேப்சூல் அனுப்பப்படும். உள்ளே வெற்றிடம் என்பதால் காந்த அலைகள் மூலம் மின்னல் வேகத்தில் இந்த கேப்சூலை நகர்த்த முடியும். இதுதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்.. நிலத்திற்குக் கீழ் இந்த வெற்றிட அமைப்பை ஏற்படுத்தலாம். அல்லது மேலே ரயில் பாலங்களைப் போல இதற்காகவும் தூண்களை அமைக்கப்படும். இந்த கேப்சூல் போன்ற அமைப்பில் பயணிகள் பயணிக்கலாம்.

எலான் மஸ்க்
உலகில் இதுவரை எந்தவொரு நாட்டிலும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் செயலில் இல்லை. இருப்பினும், இதற்கான ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிலும் இதற்கான சோதனைகளைத் தொடங்கப்பட்டுள்ளது. அங்கே இதை எலான் மஸ்க் தனது போரிங்க் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் ஆய்வுகளைச் செய்து வருகிறார். மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்வதன் மூலம் இது பொது போக்குவரத்து முறையே மாற்றும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுகள் அங்கே தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தியா
சென்னை- பெங்களூர் இடையே மட்டுமின்றி, மும்பை புனே இடையே ஹைப்பர் லூப் பாதை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. இத்திட்டம் வந்தால் சென்னை டூ புனே வரை வெறும் 35 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்குத் தேவையான ஒப்புதல்களைப் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கும் பணிகளில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் மாணவர்களும் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் போக்குவரத்தைத் தொடங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டெண்டர்
இந்தச் சூழலில் தான் ஹைப்பர் லூப் திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், சோதனை முறையில் செயல்படுத்துவது, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்தியாவில் 2026இல் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதன் பிறகு சில ஆண்டுகளில் ஹைப்பர் லூப் போக்குவரத்து திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட் -
பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் மூடல்! பேச்சுலர்களின் நிலை என்ன?












Click it and Unblock the Notifications