சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்மொழி கொள்கை, கைத் தொழில். 3,5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு.. புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இந்த புதிய கல்வி கொள்கைய அமல்படுத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.

What is New Education Policy?

புதிய கல்வி கொள்கையின் கீழ், 3-வயது குழந்தையில் இருந்து கல்வி அவசியம் என்கிறது. இது குழந்தைகள் மீதான கல்வி திணிப்பு நடவடிக்கை என்பது ஒரு குற்றச்சாட்டு.,

அத்துடன் மும்மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்கிறது புதிய கல்வி கொள்கை. இது இந்தி திணிப்புக்கான ஒரு அம்சம்தான் என்பதால் பல மாநில அரசுகளும் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றன.

மனிதவள மேம்பாட்டுத்துறை - கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்மனிதவள மேம்பாட்டுத்துறை - கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கைத்தொழில்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் முயற்சி என்பது பெற்றோரின் குலத்தொழிலை தொடரச் செய்ய வழிவகுக்கும் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்; குருகுல கல்வி போன்றவற்றை அங்கீகரிக்க மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் என பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்குரியதாகின.

தற்போது மத்திய அமைச்சரவை இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை:

English summary
Union Cabinet today approved New Education Policy. Here is details of the New Education Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X