தமிழகத்தில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை கேஸ்கள்.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால் என்ன?- முழு பின்னணி
சென்னை: தமிழகத்தில் கரும்பூஞ்சை நோய் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சில முக்கிய நோய்களை மட்டுமே தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் கரும்பூஞ்சையும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் நிறைய அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியல் உள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால், குறிப்பிட்ட சில நோய்கள் மக்களுக்கு ஏற்பட்டால் உடனே அந்த நோய் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அல்லது இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உதாரணமாக எய்ட்ஸ் என்பது கொடிய நோய், இது யாருக்காவது திடீரென ஒரு பகுதியில் ஏற்பட்டால், அந்த மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

எப்படி
இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கரும்பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. 51% இறப்பு சதவிகிதம் கொண்ட கரும்பூஞ்சை தாக்குதல் மிகவும் கொடூரமான நோயாக பார்க்கப்படுகிறது. இதை ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது.

தெலுங்கானா
நேற்று தெலுங்கானா மாநிலம் இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று தமிழக அரசும் இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதற்கு முன் எய்ட்ஸ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இருந்தது. இது போன்ற முக்கியமான நோய்கள் மட்டுமே இந்த பட்டியலில் இருந்தது.

எய்ட்ஸ்
எய்ட்ஸ், சின்னம்மை, காலரா, டெங்கு, டிப்தெரியா, ஹெபிடடிஸ், இன்ப்ளூயன்சா, லெப்ரோசி, மலேரியா, மீசல்ஸ், செரிப்ரோ ஸ்பைனல் பீவர், பிளேக், போலியோ, ரேபிஸ், டெட்டானஸ், பெரிய அம்மை, டைபாய்ட், டியூபர்குளோசிஸ் என்று முக்கியமான நோய்கள் ஏற்பட்டால் மட்டுமே அரசு பொது சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும்.

லிஸ்ட்
மூக்கு வழியாக அல்லது காது வழியாக உடலுக்குள் செல்லும் கரும்பூஞ்சை இதயம், மூளையை தாக்கும் ஆபத்து கொண்டது. தற்போது இந்த லிஸ்டில் கரும்பூஞ்சையை தமிழக அரசு சேர்த்துள்ளது. இந்த நோய் வேகமாக மக்களிடம் பரவுவதால், இதன் காரணமாக உயிரே போக வாய்ப்புள்ளதாலும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, எச்சிலில் ரத்தம், தொண்டையில் வலி, மூக்கடைப்பு ஆகியவை பிளாக் பங்கஸ் ஏற்பட்டால் வர கூடிய அறிகுறிகள் ஆகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications