Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரனூர் பக்கம் போறீங்களா? மூச்சு முட்டும் அளவுக்கு டிராபிக்.. காலையிலேயே இந்த நிலையா! புலம்பும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முற்படுவதால் பல இடங்களில் மிக மோசமான நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

நமது நாட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வரும் அக். 24இல் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்தியாவே தயாராகி வருகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாகப் பெரியளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை பெரியளவில் கொண்டாட மக்கள் ரெடியாகி வருகின்றனர்.

தீபாவளி

தீபாவளி

இந்தாண்டு திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வார இறுதி நாட்களுடன் வருவதால் அனைவரும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்புவோருக்கு உதவும் வகையில் 21.10.2022 முதல் 23.10.2022 வரை 3 நாட்களுக்குப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமே சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இதனால் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாகச் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டுமே அரசு பேருந்துகள் மூலம் 1.65 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பி உள்ளதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.

டிராபிக்

டிராபிக்

இதனால் நேற்று மாலை முதலே கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் டிராபிக் அதிகமாக இருந்தது. மிகவும் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் சூழல் உருவானது. சில கிலோ மீட்டர் கடக்கவே மணிக்கணக்கில் நேரம் ஆனது. பெருங்களத்தூரை தாண்டுவதற்குள்ளாகவே பலரும் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது என்றே சொல்லலாம்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக கார்களில் சொந்த ஊர் திரும்பும் மக்கள் தாம்பரம் வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இருந்த போதிலும், டிராபிக் அதிகமாகவே இருந்தது. குறிப்பாகச் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் டிராபிக் மிக அதிகமாகவே இருந்தது. வேலைக்குச் செல்லும் மக்கள், சொந்த ஊர் திரும்பும் மக்கள் என ஒரே நேரத்தில் இரு தரப்பும் முற்றுகையிட்டதால் அங்கு மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரனூர் டோல்கேட்

பரனூர் டோல்கேட்

இப்படி ஒரே நேரத்தில் கார்கள் அதிகம் குவிந்ததே பரனூர் சுங்கச்சாவடியில் டிராபிக் அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது. காலை நேரத்திலேயே இந்த அளவுக்கு டிராபிக் இருந்தால் மாலை இதை விட அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்குத் திரும்பும் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+