வன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன?
சென்னை: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர், சீர் மரபினருக்கு 20% மொத்த இடஒதுக்கீட்டில் 17.5% உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மொத்தம் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 69% இடஒதுக்கீடானது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 30%; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%; தாழ்த்தப்பட்டோருக்கு 18%; பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 139 ஜாதிகள் இடம் பெற்றுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 7 முஸ்லிம்களின் பிரிவுகளை உள்ளடக்கி பிசி-முஸ்லிம்கள் என உட்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பிசி- முஸ்லிம்களுக்கு 30% மொத்த இடஒதுக்கீட்டில் 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 109 ஜாதிகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 41 ஜாதிகள் தனியாகவும் உட்பிரிவான சீர்மரபினர் பட்டியலில் 68 ஜாதிகளும் உள்ளன. 41 ஜாதிகளில் ஒன்றான வன்னியர் தனி ஒதுக்கீடுக்காக எம்பிசி-வி என்ற புதிய உட்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எம்பிசி-வி உட்பிரிவில் வன்னியருக்கு மொத்தம் 20% ஒதுக்கீட்டில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 ஜாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எம்பிசி பட்டியலில் எஞ்சிய 40 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்டோருக்கான 18% இடஒதுக்கீட்டில் ஏற்கனவே அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 107 ஜாதிகளுக்கு 15%; இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கு 1% ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications