Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வரானதும் உதயநிதியின் முதல் கையெழுத்து எது தெரியுமா? முதல் பந்திலேயே சிக்ஸர்.. என்ன அது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்த பொறுப்பை ஏற்ற பிறகு அவரது முதல் கையெழுத்து தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து அதுபற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை மொத்தம் 20 நாட்கள் நடைபெற உள்ளது.

udhayanidhi stalin

இந்த போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

போட்டியை தொடங்கி வைத்த பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை 2024ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகளை இன்று உங்களின் முன்னிலையில் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமையடைகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் இங்கே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைவரையும் பார்க்கும்போது உங்களிடம் இருக்கும் உற்சாகம் அப்படியே என்னையும் தொற்றி கொள்கிறது.

துணை முதல்வர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கானது தான். இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவது தொடர்பான கோப்பில் தான் முதல் கையெழுத்திட்டேன் என்பதை நான் இங்கே பெருமையுடன் கூறி கொள்ள விரும்புகிறேன்.

இந்த சிறப்புக்குரிய நிகழ்வுக்கு 2 முக்கியமான வீரர்கள் வந்துள்ளனர். மாற்றுத்திறன் பேட்மிண்டன் வீராங்கனை தங்கை துளசிமதி முருகேசன் இங்கே வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர் தான் இவர். விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்பதற்கு சான்றாக செயல்பட்டு வரும் துளசிமதிக்கு பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக முதலமைச்சர் ரூ.2 கோடியை உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார்.

அதேபோல் திருவாரூரை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேலும் இங்கே வருகை தந்துள்ளார். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் யூத் ஒலிம்பிக்ஸ், ஏசியன் இன்டோர் சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ் 2023, ஒலிம்பிக்ஸ் 2024, காமன்வெல்த் கேம்ஸ் உள்ளிட்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றவர் தான் இவர். உங்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் ஹேண்ட் பால், கேரம், செஸ், பென்சிங், ஜூடோ, பாக்சிங், கோ- கோ, டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும் சேர்த்து இருக்கிறோம்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்துள்ள ஒவ்வொருவரும் இன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் இணைந்து உள்ளீர்கள். விளையாட்டினை நம்பி களம் நமதே என புறப்பட்டு வந்துள்ள உங்களின் கனவு வெல்ல திராவிட மாடல் கழக அரசு என்றைக்கும் துணை நிற்கும். இந்த திட்டத்தின் கீழ் நானே நேரில் சென்று 23 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான கிட் வழங்கி உள்ளேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+