வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஹைகோர்டில் தகவல்
சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே சர்வதேச மையம் கட்டப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
வடலூரில் சத்தியஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்த்தும், ஆதரித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான அரசாணையை எதிர்ப்பது ஏன், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன, வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைந்தால் வள்ளலாரின் தத்துவங்கள், கொள்கைகள் உலகம் முழுவதும் பரவும் அல்லவா, வள்ளலாரின் தத்துவங்களை ஊக்குவிக்கும் அரசு முடிவில் எந்த தவறும் இல்லையே என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, கடந்த 1867 - 1872 ம் ஆண்டுகளில் 106 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட சத்தியஞான சபை அப்படியே இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் விருப்பம். மேலும் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்வது வள்ளலாரின் விருப்பத்துக்கு முரணானது என, வள்ளலாரின் ஆறாம் திருமுறை, உத்திர ஞான சிதம்பர மான்மியம் உள்ளிட்ட பாடல்களை மேற்கோள்காட்டி வாதம் வைக்கப்பட்டது. மேலும் பெருவெளியில் புராதன சின்னங்கள் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதால் அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டது
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர், தொல்லியல் துறை ஆய்வில், இப்பகுதியில் சில கட்டுமானங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தைச் சேர்ந்த அவை தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சத்தியஞான சபையில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம், பெரிய ஞானியை பராமரிக்காதது ஏன், எப்படி ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து மொத்த 106 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
சர்வதேச மையம் கட்ட திட்ட அனுமதி பெறப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் துவங்கப்படும் எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
சத்திய ஞான சபைக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications