ரயில் தண்டவாளங்களில் ஒருவேளை கால் சிக்கிக் கொண்டால்.. தப்பிக்க என்ன செய்யனும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் தண்டவாளங்களில் மாட்டிக் கொண்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இது போன்ற இக்கட்டான சூழல்களில் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

சினிமாக்களில் எல்லாம் நாம் பார்த்திருப்போம். யாராவது ரயில் தண்டவாளங்களில் மாட்டி கொண்டால், ஹீரோ வந்து காப்பாற்றுவது போல் இருக்கும். அது போல் ரயில் தண்டவாளங்களில் காது வைத்து கேட்டால் ஏதோ சப்தம் கேட்கும் என்பார்கள்.

railway

மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே பாடலில் இப்படித்தான் ஸ்ரீதேவியும் கமலும் ரயில் தண்டவாளத்தில் காதை வைத்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். உடனே ரயில் வரும், இருவரும் ஓடுவார்கள். அப்போது ஸ்ரீதேவியின் கால் மாட்டிக் கொள்ளும், உடனே கமல்ஹாசன் காப்பாற்றுவார்.

இது போல் ரயில் தண்டவாளத்தில் கால் மாட்டி கொண்டால் காப்பாற்றுவது எளிதல்ல. இதற்காக ரயில்வே ஊழியர்கள் வந்து அந்த தண்டவாள இணைப்புகளை சற்று நகர்த்தினால் மட்டுமே இது நடக்கும். அது போல் செல்போனில் பேசிக் கொண்டே ரயில்வே டிராக்கை கிராஸ் செய்தாலும் இது போன்று ஒரு சம்பவம் நடக்கும்.

எனவே ரயில்வே தண்டவாளங்களில் யாருடைய காலாவது மாட்டிக் கொண்டால், உடனே உங்களிடம் உள்ள செல்போனை எடுத்து அதில் 139 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் அது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு செல்லும். அவர் உடனே ஏதோ ஆபத்து என கருதி அவ்வழியாக செல்லும் ரயிலை நிறுத்துவார்.

இதையடுத்து அந்த இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் வந்து பார்த்து உங்களை அவர்கள் காப்பாற்றி பத்திரப்படுத்துவர். எனவே இனி இப்படி ஒரு சூழல் வந்தால் 139-க்கு கால் செய்தால் உயிரிழக்கும் நிலை ஏற்படாது. நமது கவனக்குறைவால் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+