Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் 12 ஏரிகளை ஆழப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளை ஆழப்படுத்தி, கொள்ளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க நவீன நீர் சேகரிப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும், சென்னையில் உள்ள செம்பரபாக்கம், புழல் உள்பட 12 ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

What steps have you taken to deepen the 12 lakes of Chennai: asked high court

அந்த மனுவில், ஏரிகளில் நீர் பிடிப்பை அதிகரிக்க மேற்கொள்ளபட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை ஆழபடுத்தி, கொள்ளளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+