அண்ணாத்த படத்தில் "பேய்" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா?
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட போதிலும் அண்ணாத்த படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்குமா இருக்காதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ரஜினி படங்கள் என்றாலே ஸ்டைலுக்கு அப்பாற்பட்டு ஓபனிங் சாங், பஞ்ச் வசனங்கள் நிச்சயம் இருக்கும். இது அனைவரும் அறிந்ததே. ரஜினியை கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள்.
ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை. இதை உணர்த்தும் வகையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என பாடியிருப்பார்.

ஆண்டவன்
பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி, நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,ஆனா கைவிட மாட்டான், நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.., ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான், நான் சொல்றதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலம்.

எப்டி வருவேன்
நான் எப்ப வருவேன் எப்டி வருவேன் எனும் வசனம் அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களுக்கு அறிவுறுத்துவது போன்று பார்க்கப்பட்டது. இப்படியாக ரஜினி பஞ்ச் வசனங்களுக்கென திரைக்கு சென்று படம் பார்ப்போர் அதிகம். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

உடல் நிலை பாதிப்பு
ஒரு வேளை அவர் ஜனவரியில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டிருந்தால் என் வழி தனி வழி என்ற பஞ்ச் தமிழகம் முழுவதும் அதிர்ந்திருக்கும். அது போல் பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்ல என்ற டயலாக்கும் கனகச்சிதமாக சூழலுக்கு ஏற்ப பொருந்திருக்கும். ஆனால் உடல் நிலை பாதிப்பால் அவரால் அரசியலுக்கு வர இயலாது என கூறிவிட்டார்.

ரசிகர்கள்
இதனால் இனி அவர் படங்களில் நடிப்பார் என்றே கருதப்படுகிறது. அப்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் அண்ணாத்த. இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் முதல்வர் ஆனாலும் ஆகாவிட்டாலும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது இந்த படத்தை.

பஞ்ச்
இதிலாவது அவரை பார்க்கலாம் என்பதுதான். அரசியலுக்கு வரவில்லை எனும் போது இந்த படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்குமா, அப்படியிருந்தால் எந்த மாதிரியான வசனங்கள் வைக்கப்படும். அரசியலுடன் ஒன்றி இருக்கும் பஞ்ச் வசனங்களுக்கே தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும், இந்த படத்தில் அது போன்ற பஞ்ச் வைத்தால் நீங்க தான் அரசியலுக்கு வரலையே எதுக்கு இந்த பஞ்ச் என டிரோல் செய்வர். இதனால் இந்த படத்தின் டயலாக்குகளும் பஞ்ச்சும் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மொத்தத்தில் இது அண்ணாத்த தீபாவளியாகவே இருக்கும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications