இரு அணிகள் இணைப்புக்கு பிறகு பரபரக்கும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையிலான சந்திப்பு.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இன்று சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா இரவோடு இரவாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையால் எங்கே சசிகலாவால் அதிமுகவில் குழப்பம் வந்துவிடுமோ என கருதிய அதிமுக நிர்வாகிகள் சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே வந்தது. இருவரும் நேருக்கு நேராக கருத்து மோதலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

சசிகலா தொண்டர்கள்

சசிகலா தொண்டர்கள்

தனித்தனியாக அறிக்கையை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சசிகலா தொண்டர்களுடன் பேசும் 5 ஆடியோக்கள் வெளியாகின. இந்த ஆடியோக்கள் வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டவை. இதில் பேசிய சசிகலா தான் விரைவில் வந்து கட்சியை சீரமைப்பேன், ஜெயலலிதா இருந்த போது கட்சி எப்படி இருந்ததோ அப்படி வைத்திருப்பேன்.

மனதிற்கு வேதனை

மனதிற்கு வேதனை

அதிமுகவில் நிர்வாகிகள் சண்டையிடுவது மனதிற்கு வேதனையை தருகிறது என்றெல்லாம் பேசியிருந்தார். இதன் மூலம் சசிகலா அதிமுகவை கபளீகரம் செய்ய ஆயத்தமானது கண் கூடாகவே தெரிந்தது. அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்குள் ஏற்கெனவே சண்டையிட்டு கொண்டுள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து கருத்தொற்றுமையுடன் இருந்தால் சசிகலா தலையீட்டை தவிர்க்கலாம் என நாம் ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அதில் மோதல் போக்குடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் ஒற்றுமையாக இருந்தால் நடுவே சசிகலா வருவதை தடுக்கலாம் என கூறியிருந்தோம். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக உறுப்பினர்

அதிமுக உறுப்பினர்

இதில் என்னவெல்லாம் பேசப்பட்டிருக்கலாம் என்பது குறித்து பார்ப்போம். சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லாத நிலையிலும் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த ஆடியோக்களை ரிலீஸ் செய்து வருகிறார். இதனால் கட்சியில் ஒற்றுமையாக செயல்பட்டு சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசித்திருக்கலாம்.

அதிமுக

அதிமுக

ஒரு வேளை சசிகலா அதிமுகவை கைப்பற்ற வந்தால் அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்பு இருக்கிறது. அதை தடுக்க என்னவெல்லாம் செய்வது? சசிகலா பக்கம் முக்கிய நிர்வாகிகள் சாயாமல் இருக்க என்ன செய்வது போன்ற விஷயங்களை விவாதித்திருக்கலாம் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+