ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி!
ஒரே ஓட்டல் அறையில் திருமணமாகாத ஆண்-பெண் தங்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது
கோவை: "கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லையே.. கல்யாணம் ஆகாத 2 பேரும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கோவையில் ஒரு தனியார் லாட்ஜ் ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. இந்த லாட்ஜில் ஒரு ரூமில், கல்யாணமாகாத ஒரு ஆணும், பெண்ணும் தங்கியிருந்துள்ளனர்.. இன்னொரு ரூமில் மதுபாட்டில்கள் இருந்துள்ளன.. அதனால், போலீசார் இந்த லாட்ஜை பூட்டி சீல் வைத்தனர்.
இந்த லாட்ஜ் ஓனர் ஹரியானாவை சேர்ந்தவர்.. அதனால், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கு நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

லாட்ஜ்
அப்போது, பத்திரிகைகள், சோஷியல் மீடியாவில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டுதான் லாட்ஜ் மூடப்பட்டு விட்டதாகவும், இதற்கு லாட்ஜில் எந்த விளக்கமும் கேட்காமல் சீல் வைத்தது, இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

சோதனை
ஆனால், "லாட்ஜில் சோதனை நடத்தும்போது, ஒரு ரூமில் கல்யாணம் ஆகாத ஆண், பெண் இருந்ததாகவும், இன்னொரு ரூமில் மதுபாட்டில்கள் லைசென்ஸ் பெறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும், அதற்காகவே சீல் வைத்தோம்" என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டது.

விளக்கம்
எனினும் போலீசாரின் இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை.. "கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லையே.. கல்யாணம் ஆகாத 2 பேரும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது? கல்யாணமாகாத, ஆணும் பெண்ணும் ‘லிவிங் டுகெதர்' முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ, அதுபோலதான், 2 பேரும் ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் தங்குவதும் குற்றமாகாது" என்று விளக்கம் அளித்தார்.

மதுபாட்டில்கள்
"ஒரு ரூமில் மதுபாட்டில்கள் கிடைத்துவிட்டால், அதை இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.. தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டரும், வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டரும், பீர் - 7.8 லிட்டரையும், 9 -லிட்டர் ஒயினையும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளன" என்பதை நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், லாட்ஜில் மதுபாட்டில்கள் இருந்தது குற்றமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

உத்தரவு
எனவே, உரிய சட்டவிதிகளை பின்பற்றாமல் வைக்கப்பட்ட சீலை, 2 நாட்களில் அகற்றவும் கோவை மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications