Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KB Sundarambal: கே.பி.சுந்தராம்பாள் வீட்டிற்கு வந்த காந்தி! தங்கத்தட்டில் உணவு! மகாத்மா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கே.பி.சுந்தராம்பாள் (K.B.Sundarambal / KBS Theatre) வீட்டிற்கு தேசபிதா மகாத்மா காந்தி வந்திருந்த போது அவருக்கு தங்கத் தட்டில் உணவு அளித்ததுடன் அவருக்கு அதை பரிசாகவும் அளித்திருந்தாராம். கொடுமுடியில் கேபிஎஸ் திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ள நிலையில் சுந்தராம்பாள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள். சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து நாடகங்களில் நடித்து பின்னாளில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த அறிஞர் அண்ணாவால் கொடுமுடி கோகிலம் என அழைக்கப்பட்டார்.

kb sundarambal erode Gandhi

அதாவது கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (Kodumudi Balambal Sundarambal - K.B. Sundarambal) என்பது அவருடைய முழு பேராகும். கொடுமுடியில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்ப வறுமை காரணமாக ரயில்களில் பாட்டு பாடி யாசகம் பெற்றார். அப்போது இவரது குரல் வளத்தை கண்டு மெச்சிய நடேச ஐயர் என்பவர் தனது சொந்த செலவில் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டார்.

நாடகத் துறை

இதன் மூலம் நாடகத் துறையில் பவளக் கொடி, கோவலன், நல்லதங்காள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தார். பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்டார்.

ரூ 1 லட்சம் சம்பளம்

நாடக நடிகையான சுந்தராம்பாள் "பக்த நந்தனார்" என்ற படத்தின் மூலம் திரை பிரவேசம் செய்தார். திரைத்துறையிலும் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அவரது முதல் படமான பக்த நந்தனாருக்கு 1935 ஆம் ஆண்டிலேயே ரூ 1 லட்சம் ஊதியமாக பெற்றார்.

25 வயதிலேயே விதவை

ஆனாலும் சுந்தராம்பாள் தனது 25 வயதிலேயே, அதாவது திருமணம் செய்த 6 ஆண்டுகளில் கணவரை இழந்து விதவைக் கோலம் பூண்டார். அது முதல் வெள்ளைச் சேலை அணிந்திருந்தார். மேலும் எந்த நடிகருடனும் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சபதம் செய்திருந்தார்.

பழம் நீயப்பா

தனது வெங்கல குரலால் "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா, "அரியது, அரியது" போன்ற பாடல்களை பாடினார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கே.பி.சுந்தராம்பாளின் வீட்டிற்கு ஒரு முறை மகாத்மா காந்தியடிகள் வருகை தந்து உணவு சாப்பிட்டாராம்.

தங்கத் தட்டில் விருந்து

அப்போது அவருக்கு தங்கத்தட்டில் கே.பி.சுந்தராம்பாள் உணவு அளித்தாராம். காந்தியடிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த தங்கத்தட்டை காந்திக்கு பரிசாகவும் கொடுத்தார். பின்னாளில் அந்த தட்டை ஏலமிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திர போராட்டங்களுக்கு காந்தியடிகள் பயன்படுத்திக் கொண்டாராம்.

கொடுமுடி தியேட்டர்

1968 ஆம் ஆண்டு கொடுமுடியில் கேபிஎஸ் திரையரங்கம் என்பதை தொடங்கினார். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்த தியேட்டரை முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் வந்து, சுந்தராம்பாள் வீட்டில் தங்கியிருந்து தியேட்டரை திறந்து வைத்தனராம்.

கொரோனா லாக்டவுன்

இந்த தியேட்டர் கொரோனா லாக் டவுன் வரை நன்றாக வருவாய் ஈட்டி தந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸாகவில்லை என்பதால் இந்த தியேட்டரை இடிக்க தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 56 ஆண்டுகள் கழித்து இந்த தியேட்டர் தரைமட்டமாக்கப்பட்டது. கொடுமுடியில் முதல் முறையாக தொடங்கிய தியேட்டர் தற்போது தரைமட்டமானதை பார்க்கும் ரசிகர்கள் மனவேதனையில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+