"எங்களை சீண்டாதீங்க.. நாங்க ஆட்சிக்கு வந்தா காவல் நிலையமே இருக்காது”- பாஜக நிர்வாகி பகிரங்க மிரட்டல்
அரியலூர்: "நாங்க ஆட்சிக்கு வந்ததும் இங்கு காவல் நிலையமே இருக்காது. அரசு அதிகாரிகளோ.. போலீஸ்காரர்களோ.. எங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்" என பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் பகிரங்க மிரட்டல் விடுத்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொகுதி பங்கீடு என தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான அய்யப்பன் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திடீரென போலீசார் அரசு அதிகாரிகளைக் கண்டித்து அவ பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அய்யப்பன் பேசுகையில், "அனைவரும் திமுகவை தீயசக்தி என்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளை கூறுகிறேன். பெண்கள் இந்த கூட்டம் முடிந்து பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால், குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சூழல் நிலவுகிறது. சங்கிலி பறிப்பு நடக்கிறது. காவல்துறைக்கே பாதுகாப்பு கிடையாது.
ஆனால், காவல்துறையினர் இங்கே கூட்டம் போடாதே, அங்கே போடாதே என்று நம்மிடம் தான் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பேசுவார்கள். இன்னும் இரண்டே மாதம் தான். திமுக ஆட்சி முடிஞ்சு போச்சு. அதன்பிறகு அதிமுக தலைமையிலான பாஜக தான் ஆட்சிக்கு வரும்.
அப்போது, தா.பழூரில் காவல் நிலையமே இருக்காது. கூண்டோடு கலைத்து வெளியூருக்கு அனுப்பி வச்சுருவோம். ஆகையால், அரசு அதிகாரிகளோ? போலீஸ்காரர்களோ? எங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்" என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications