நடிகர் விஜயின் அரசியல் பயணம் எப்போது? வந்து விழுந்த கேள்வி.. புஸ்ஸி ஆனந்த் ரியாக்சன் என்ன தெரியுமா?
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் அடுத்த பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறது என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று பரபரப்பான கூறினார். இந்த சமயத்தில் அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் பயணம் எப்போது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு புஸ்ஸி ஆனந்த் கொடுத்த ரியாக்சன் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.

இதையடுத்து நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் சமீபத்தில் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் மதிப்பெண்ணில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார்.
மேலும் ‛பணம் வாங்கி கொண்டு மக்கள் ஓட்டுப்போட கூடாது. உங்கள் குடும்பத்தினரையும் ஓட்டு பணம் வாங்க விடக்கூடாது' என அவர் அட்வைஸ் கூறினார். அதோடு அம்பேத்கர், காமராஜர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறினார். இந்த பேச்சு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்குள் நுழையலாம் என்ற தகவல்கள் பரவ தொடங்கின.
மேலும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து அணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்க் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ‛‛யார் என்ன சொன்னாலும் சரி. நாம் மற்றவர்களை ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் விமர்சனம் செய்யக்கூடாது. நாகரீகமான முறையில் தான் பதிலடி கொடுக்க வேண்டும். மேலும் ஐடி விங்க்கை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கினார். இதையடுத்து கூட்டத்தின் முடிவில், புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛விஜய் மக்கள் இயக்கம் அடுத்த பரிணாமத்தை நோக்கி பயணிப்பதாக கூறுகிறீர்கள். அடுத்த பரிணாமம் என்பது அரசியல் பயணமா'' என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு புஸ்ஸி ஆனந்த், ‛‛அடுத்த பரிணாமம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். இது தான் விஜயின் விருப்பம். அதன்படி சேவைகள் செய்து வருகிறோம். நல்ல விஷயங்கள் செய்வதை வலைதளம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது'' என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛இந்த நடவடிக்கைகள் அரசியல் வடிவமாக எப்போது மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு புஸ்ஸி ஆனந்த் சிரித்தப்படியே, ‛வரேன்' என கூறிவிட்டு புறப்பட்டார். இந்த வீியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications