தமிழக அரசுக்கு தர்மசங்கடம்.. பார்த்து பார்த்து பிளான் போட்டும் சொதப்பிய "'டெல்லி".. அடுத்து எப்போது?
ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை
சென்னை: திமுக அறிவித்த 1000 ரூபாய் பணம் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம், பரவலாக எழுந்து வந்த நிலையில், அது குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக அறிவித்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மிகப்பெரும் கவனத்தை பெற்றது... ஆனால், ஆட்சி அமைத்ததும் இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை..
இதற்கு பிறகு, தமிழகத்தில் தொற்று குறைந்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது..

பட்ஜெட்
எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் நவம்பரில் நடத்த உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றிவிடும் என்றும், அநேகமாக நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே அறிவிப்பு வெளியாகவில்லை. இதை எதிர்க்கட்சிகள் இப்போது வரை கேள்வி எழுப்பி கொண்டே இருக்கின்றன.. நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி இதை குற்றச்சாட்டாகவே செய்தியாளர்களிடம் முன்வைத்திருந்தார்.

அதிருப்தி
இதனிடையே, தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மீண்டும் 1000 ரூபாயை முதல்வர் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் சில வாரங்களுக்கு முன்பு கசிந்தன.. இந்த திட்டத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று திமுக அரசு கணக்கு போட்டதாம்.

பரிசுதொகை
அப்படி செய்தால் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றியது போல் இருக்கும், பொங்கலுக்கும் பரிசு தொகை தந்தது போல இருக்கும் என்று யோசித்ததாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால், முன்கூட்டியே இத்தகைய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது திமுகவுக்கு சாதகமான முடிவுகளையே பெற்று தரும் என்றும் நம்பப்பட்டது.

மத்திய அரசு
அதனால்தான், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழர் திருநாளில் துவக்கி விட பகீரதபிரயத்தனம் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையும், மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையையும் கேட்டு மத்திய அரசிடம் 3 முறை கோரிக்கை வைத்திருந்தாராம்.. எப்படியும் அது கிடைத்து விடும், அந்த தொகை கிடைத்தால் இல்லத்தரசிகளுக்கான திட்டத்தை துவக்கி விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தாராம்.
Recommended Video

கிடப்பில் திட்டம்
ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் இல்லத்தரசிகளுக்கான திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.. இப்போதைக்கு இது ஒரு தர்மசங்கடமான நிலை என்றாலும், மத்திய அரசுடன் தற்போது மென்மை போக்கை கடைப்பிடித்து வருவதால், நிச்சயம் தமிழகத்துக்கான வர வேண்டிய அனைத்து நிதிகளையும் திமுக அரசு பெற்று விடும் என்றும், அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிவிடுவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது..!
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications