நிர்கதியில் விட்டுட மாட்டார்.. உன்னை மீட்டுவிடுவேன்.. சசிகலா கொடுத்த அந்த வாக்கு.. விரைவில் "அவுட்"!
சென்னை: தனது அக்கா மகன் சுதாகரனுக்கு சசிகலா கொடுத்த முக்கியமான வாக்கு ஒன்றை இன்னும் நிறைவேற்றவில்லையாம்.. மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து சிறை சென்றவர் அவரின் அக்கா மகன் மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறியப்பட்ட சுதாகரன். இவரும் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில்தான் அடைக்கப்பட்டார்.
இவருக்கும் 4 ஆண்டு சிறை + 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கொடுக்கவில்லை என்றால் கூடுதலாக ஒரு வருட சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

சிறை
சசிகலாவுக்கு இதே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு 4 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து வந்துவிட்டார். ஆனால் சுதாகரனுக்கு இப்படி யாரும் அபராதம் கட்டவில்லை. இதனால் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும் சுதாகரன் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

ஏன்
சுதாகரனுக்கு சட்ட விதிப்படி அவரின் ரத்த சொந்தத்தினர் யாராவது 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் இந்த 10 கோடிக்கு கணக்கு காட்ட வேண்டும். அதோடு 10 கோடிக்கு வரியும் கட்ட வேண்டும். இதனால் சுதாகரனுக்காக இதுவரை யாரும் அபராதம் கட்ட தைரியமாக முன்வரவில்லை.

என்ன சொன்னார்
சசிகலா சிறையில் இருந்து வந்த பின்.. சுதாகரனுக்கு இது தொடர்பாக நம்பிக்கை கொடுத்துள்ளார். நான் வெளியே வந்துவிட்டேன்.. உன்னை கண்டிப்பாக வெளியே எடுப்பேன் என்று கூறி இருக்கிறார். அதோடு சசிகலாவிற்கு நெருக்கமான சிலரும் சுதாகரனிடம் பேசி உள்ளனராம். உங்களை நிர்கதியில் விட மாட்டார்கள்.. இப்போது சூழ்நிலை சரியில்லை.. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கூறி உள்ளனராம்.

தேர்தல்
தேர்தல் முடியட்டும் என்று சசிகலா காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் முடிந்ததும் சூழ்நிலை சாதகம் ஆகும்.. அபராத தொகையை கட்டி சுதாகரனை வெளியே கொண்டு வருவதே பிளான் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் சுதாகரன் இப்போது வெளியே வர எந்த விதத்திலும் அவசரப்படவில்லை என்கிறார்கள்.

பக்தி
சிறையில் ஏற்கனவே சுதாகரன் பக்திமானாக மாறிவிட்டார். இனி நடப்பது நடக்கட்டும்.. கடவுள் அருள்.. கடவுள் நினைப்பதே நடக்கும் என்று சுதாகரன் அமைதியாகிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் சசிகலாவோ தான் கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.. விரைவில் சுதாகரன் வெளியே வருவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications