"ஒன் இ" மட்டும் முழுமையாக நிறைவேறினால்.. மின் கட்டண முறையே மொத்தமாக குறையும்.. இபி போர்ட் பிளான்!
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான மின்சாரம் வழங்குவதற்கு I-E எனப்படும் புதிய கட்டண வகையை உருவாக்கி, நவம்பர் 1 முதல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதிய முறை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 1-டி பிரிவின் கீழ் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 விதிக்கப்படுகிறது. இது முதலில் 8 ரூபாயாக இருந்தது. அது பின்னர் 8.15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது மக்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதற்காக 1 - இ என்ற பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்படி மூன்று தளங்கள் அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள், 10 குடியிருப்புகள் அல்லது அதற்கும் குறைவான குடியிருப்புகள் மற்றும் சான்ஸ் லிஃப்ட்கள் ஐ-இ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 வசூலிக்கப்படும். இருப்பினும், TNERC உத்தரவின்படி, I-D மற்றும் I-E வகைகளுக்கு நிலையான கட்டணங்கள் ஒரு kW க்கு ரூ.102 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்னும் செயலுக்கு வரவில்லை: TNERC உத்தரவில், டாங்கெட்கோ முன்மொழிந்தபடி, மாநிலம் முழுவதும் உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் நலனுக்காக, பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டணக் குறைப்பால் டாங்கெட்கோவிற்கு வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட, மாநில அரசு கூடுதல் தற்காலிக மானியத்தை முன்கூட்டியே விடுவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் நவம்பர், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இன்னும் பல குடியிருப்புகளுக்கு இந்த புதிய கட்டண விகிதம் மாற்றப்படவில்லை. இதனால் பல அதிக கட்டணம் செலுத்தும் நிலை இல்லை.
இதனால் மாதம் மாதம் 300 - 500 ரூபாய் வரை பலரும் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்., சமீபத்தில் மாநில அரசு அறிவித்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்குத் தகுதியான அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான விநியோக இணைப்புகளை அடையாளம் காண, டாங்கேட்கோ பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தினார்கள். வீடு வீடாக இதற்காக சர்வே எடுக்கப்பட்டது.
வெள்ளம் அமல்: ஆனால் அதன்பின் பல இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் காரணமாக கணக்கெடுப்பில் தொய்வு ஏற்பட்டது.
மீண்டும் நடக்கும்; இந்த வாரம் மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications