சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போகுது.. சென்னை ஐசிஎப் தந்த அடுத்த குட் நியூஸ்.. ஒரே இலக்கு.. சபாஷ்
சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த தன்னுடைய அடுத்தக்கட்ட இலக்கை அதிரடியாக தற்போது அறிவித்திருக்கிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. இங்கு தற்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத்: சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன...
வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
பெட்டிகள்: இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இவற்றில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவை அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளனவாம்..
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சொன்னபோது, "ஐசிஎஃப்-ல் நடப்பு நிதியாண்டில் 2,700 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் விரைவாக தயாரித்து வழங்கி இருக்கிறோம். இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் தயாரித்து வழங்க உள்ளோம்.. எல்எச்பி பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள், மெமு விரைவு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குகிறோம்.
மிகப்பெரிய திட்டம்: ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க கூடுதல் காலம் ஆகிறது. இருந்தாலும், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதிய சாதனை: கடந்த வாரம்தான், ஐசிஎப் புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தது. அதாவது, முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த 2023 - 24 உற்பத்தி வருடத்தை எடுத்துக் கொண்டால், நேற்று வரை 1,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதில், வந்தே பாரத் ரயில்கள், மின்சார ரயில்கள், நெடுந்தொலைவு மின்சார ரயில்கள், தானியங்கி ஆய்வு ரயில்கள், தானியங்கி விபத்து உதவி ரயில்கள் உள்ளிட்டவற்றுக்கான பெட்டிகளை தயாரித்து, நாட்டிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த சாதனையை ஐசிஎப் படைத்துள்ளது. இந்நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருப்பது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications