Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போகுது.. சென்னை ஐசிஎப் தந்த அடுத்த குட் நியூஸ்.. ஒரே இலக்கு.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த தன்னுடைய அடுத்தக்கட்ட இலக்கை அதிரடியாக தற்போது அறிவித்திருக்கிறது.

உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. இங்கு தற்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

When will Vande Sadharan Train come to Tamil nadu and Huge plan is to manufacture 3000 boxes in ICF

அந்தவகையில், வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத்: சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன...

வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

பெட்டிகள்: இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இவற்றில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவை அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளனவாம்..

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சொன்னபோது, "ஐசிஎஃப்-ல் நடப்பு நிதியாண்டில் 2,700 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் விரைவாக தயாரித்து வழங்கி இருக்கிறோம். இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் தயாரித்து வழங்க உள்ளோம்.. எல்எச்பி பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள், மெமு விரைவு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குகிறோம்.

மிகப்பெரிய திட்டம்: ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க கூடுதல் காலம் ஆகிறது. இருந்தாலும், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய சாதனை: கடந்த வாரம்தான், ஐசிஎப் புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தது. அதாவது, முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த 2023 - 24 உற்பத்தி வருடத்தை எடுத்துக் கொண்டால், நேற்று வரை 1,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இதில், வந்தே பாரத் ரயில்கள், மின்சார ரயில்கள், நெடுந்தொலைவு மின்சார ரயில்கள், தானியங்கி ஆய்வு ரயில்கள், தானியங்கி விபத்து உதவி ரயில்கள் உள்ளிட்டவற்றுக்கான பெட்டிகளை தயாரித்து, நாட்டிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த சாதனையை ஐசிஎப் படைத்துள்ளது. இந்நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருப்பது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+