சிஏஏவுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் நமது நன்றிக்குறியவர்.. ப சிதம்பரம் சரமாரி கேள்வி
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர் என ப சிதம்பரம் பரபரப்பு டுவிட் பதிவினை வெளியிட்டுள்ளார்.
டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவரான ஜாகோப் லிண்டெந்தால் ஜூலை முதல் இந்தியாவில் தங்கியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறை மாணவராக படித்து வந்தார். அவரது எக்சேஞ்ச் திட்டம் 2020ம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைவதாக இருந்தது.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால் பங்கேற்றார. இதையடுத்து குடிவரவு அதிகாரிகள் அவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனி நினைவூட்டும்
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், உலக வரலாற்றில் ஜெர்மனி நமக்கு ஒரு இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டுகிறது என்றும் ஜெர்மனி நினைவூட்டும் இருண்ட அத்தியாயத்தை இந்தியாவில் மீண்டும் செய்யாதீர்கள் என்றும் வலியுறுத்தினார்.
|
ஜெர்மன் மாணவர்
அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர் அவரை வெளியேற்றியது ஏன் என்று ஐ.ஐ.டி இயக்குனர் மற்றும் தலைவர் ஆகிய இருவரையும் கேட்போம்.என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
|
எதிர்க்கணும்
. ஐ.ஐ.டி.யின் மற்ற மாணவர்கள் எங்கே? ஜெர்மன் மாணவர் வெளியேற்றப்பட்டதற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். என்றும் சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கவலைப்படுகிறேன்
முன்னதாக ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால் போராடிய குறித்து கூறுகையில், நான் மெட்ராஸ் ஐ.ஐ.டி கேம்பஸை நேசிக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஆனால் நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஜெர்மனியில், சட்டப்பூர்வமான இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக, யாரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications