ஜான் பாண்டியன் "தடுமாறி" தாமரையில் மலர்ந்துட்டாரு.. எடப்பாடிக்கு "அடி".. எகிறியடிக்கும் ஸ்பீடு பாஜக
சென்னை: ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
"பாஜகவுடன் கூட்டணி முடிந்தது" என்று எடப்பாடி பழனிசாமி அன்று அறிவித்ததுமே, கூட்டணி கட்சிகளுக்கு கிறுகிறுவென தலையே சுற்றிவிட்டது. அதிலும், தமாகா தலைவர் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் என யாருமே இந்த கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்..

கூட்டணி கட்சிகள்: அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இவர்கள் அனைவரும் இணைக்க போவதாக தகவல் வெளியானது. ஜான்பாண்டியனும் இப்படியான முயற்சியை எடுப்பதாக சொன்னார்கள்.
ஒருமுறை ஜான் பாண்டியன் பேட்டி தந்போது, "பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதி இதுவாகும். காரணம், வைகோ அண்ணனை வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது" என்றார் ஜான்பாண்டியன்.
டேமேஜ் திமுக: ஆக, ஒருபக்கம் முறிந்த கூட்டணியை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டே, மறுபக்கம் திமுகவையும் டேமேஜ் செய்து பேசியிருந்தார் ஜான் பாண்டியன். எனினும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை ஒரு தலைவராலும் தகர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
எனவே, அதிமுகவா? பாஜகவா? யாரிடம் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்துக்கு மொத்த தலைவர்களும் ஆளானார்கள். இதில், பாரிவேந்தர் மட்டும், பாஜகவுக்கான ஆதரவை முதல்நபராக தந்துவிட்டார்.
ஜிகே வாசன்: ஆனால், வாசன் போன்ற தலைவர்கள் நிறையவே குழம்பிவிட்டார்கள். இப்போதைக்கு தங்கள் முடிவை சொல்வதில்லை என்றும் அறிவித்து 2 மாத காலம் ஒதுங்கியும் கொண்டார்கள். இந்த 2 மாத காலமும் எந்த சாதகமான முடிவும் ஏற்படவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், யாருடனாவது கூட்டணியை அறிவிக்க வேண்டிய நெருக்கடி, தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
எனவேதான், சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டத்தை கூட்டியிருந்தார் ஜான் பாண்டியன்.. இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது எம்பி தேர்தலுக்காக, "உட்கட்சி" தேர்தலை நடத்தினார் ஜான் பாண்டியன்.
பேச்சுவார்த்தை: பிறகு செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் பேசும்போது, "வாக்குச்சீட்டு வாயிலாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். இதனை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது... அனைத்து கட்சி சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார்.. ஆனால், தன்னுடைய முடிவை அறிவிக்கவில்லை.
நேற்றைய தினம், தமாகா தலைவர் வாசன், பாஜகவுக்கான ஆதரவை அறிவித்திருக்கிறார். இதையடுத்து, இன்றைய தினம் ஜான் பாண்டியனும், பாஜகவுக்கான ஆதரவை அறிவித்துள்ளார்..
நன்றி: உண்மையிலேயே இந்த கூட்டணி விஷயத்தில் ஜான் பாண்டியன் நிறையவே குழப்பத்தில் இருந்ததாக தெரிகிறது. காரணம், தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, அதிமுகவும், பாஜகவும் சேர்ந்தே நிறைவேற்றி தந்திருக்கின்றன.. இதைத்தான் ஒவ்வொருமுறையும், 2 கட்சிகளையுமே விட்டுக்கொடுக்காமல் ஜான்பாண்டியன் நன்றியுடன் நினைவுகூர்ந்து வந்தார்.
எனினும், அதிமுகவா? பாஜகவா? இதில் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்? என்ற ஆர்வம் எகிறியபடியே இருந்த நிலையில், இன்று பச்சைக்கொடி பாஜகவுக்கு காட்டப்பட்டுள்ளது. தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ஜான் பாண்டியன் மகள்: ஆனால், எந்த தொகுதியில் களமிறங்குகிறார்கள் என தெரியவில்லை. சாதகமான 5 தொகுதிகளை ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருப்பதால், அவைகளில் ஒன்றை பாஜக ஒதுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், ஜான்பாண்டியன் மகள் வினோலின் நிவேதா தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதற்குள், கூட்டணியை முடிவு செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக மேடை ஏற்றிட வேண்டும் என்று பாஜக பெரிதும் முயன்றது.
சபாஷ் பாஜக: இருந்தாலும், ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. ஓபிஎஸ் + தினகரன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் - என கிட்டத்தட்ட கூட்டணியை தயார் செய்துவிட்டது. அந்தவகையில், அதிமுகவைவிட ஒரு படி தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications