4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி உள்கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஃபேம் (FAME) திட்டத்தின் தொடர்ச்சியாக, இப்போது பிஎம் எலக்ட்ரிக் டிரைவ் ரெவலியூஷன் இன் இன்னோவேட்டிவ் வெஹிக்கிள் என்ஹான்ஸ்μενட் எனப்படும் "பிஎம் இ-டிரைவ்" (PM E-DRIVE) திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மெகா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 74 மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் மின்சார வாகனங்களுக்காகப் பிரத்தியேகமாக 4,874 பொது சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான பணிகளுக்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் இப்போது அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

EV Charging Stations Tamil Nadu Electric Vehicles Central Government EV Infrastructure Highway Charging Network EV EV

4874 EV சார்ஜிங் நிலையங்கள்

இந்த பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்திற்காக ஒன்றிய அரசு சுமார் 2,000 கோடி ரூபாய் நிதியை மானிய உதவியாக ஒதுக்கீடு செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 74 முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில், 50 வழித்தடங்கள் மின்சார கார்கள் மற்றும் பஸ்களுக்காகவும், மற்ற 24 சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் கனரக இ-டிரக்குகள் மற்றும் மின்சார சரக்கு வாகனங்களுக்காகவும் ஸ்பெஷலாக பிரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.

2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

இத்தகைய சூழலில், இந்த தேசிய அளவிலான மெகா திட்டத்தின் முதற்கட்ட செயல்பாட்டில் தமிழகத்திற்கு மிக முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமையவிருக்கும் மொத்த சார்ஜிங் ஸ்டேஷன்களில், முதற்கட்டமாக 498 பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமையவிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமையவிருக்கும் வழித்தடங்கள் மிகவும் நுட்பமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டை கடந்து செல்லும் மற்றும் அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் பல முக்கிய சாலைகள் இந்த மெகா திட்டத்தில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.


தமிழகத்தில் மின்சார வாகனங்கள்

முக்கியமாக மாநிலத்தின் தலைநகரையும் அண்டை மாநிலங்களையும் இணைக்கும் சென்னை - பெங்களூரு வழித்தடம், மற்றும் தென் தமிழகத்தை இணைக்கும் சென்னை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அத்துடன் தமிழகத்தின் பிரதான வழித்தடங்களான சென்னை - திருச்சி மற்றும் சென்னை - தூத்துக்குடி ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமையவுள்ளன. மேலும், கொங்கு மண்டலப் போக்குவரத்தை வலுப்படுத்தும் பெங்களூரு - கோயம்புத்தூர், கோயம்புத்தூர் - திருச்சி, மற்றும் கோயம்புத்தூர் - நாகப்பட்டினம் உள்ளிட்ட மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களிலும் புதிய சார்ஜிங் நிலையங்கள் தடையின்றி அமைக்கப்பட உள்ளன.

1,800 பொது சார்ஜிங் நிலையங்கள்

முக்கியத் தொழில் நகரங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய முக்கிய போக்குவரத்து முனையங்களை இணைக்கும் சாலைகளிலும் இந்த சார்ஜிங் புள்ளிகள் அமையவுள்ளதால் ஒட்டுமொத்த மாநிலமும் பயன்பெறும். தமிழகத்தில் இப்போதைக்கு சுமார் 1,800 பொது சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய 498 அதிவேக நிலையங்களின் சேர்க்கையானது மாநிலத்தின் மின்சார வாகன உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு மிக எளிதாக நகர்த்தும் என்றே தெரிகிறது.

மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தொழில்நுட்பத் தேவைகளின் அடிப்படையில் நிதிப் பகிர்வு மாறுபடுகிறது.

தமிழகத்தில் இந்த புதிய வசதிகளை மேம்படுத்த 498 சார்ஜிங் புள்ளிகளுக்காக மொத்தம் 34.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனுக்கான சராசரி செலவு சுமார் 6.9 லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரி செலவான 10.3 லட்சம் ரூபாயை விடக் குறைவு என்கிறார்கள்.

இந்த நிதி வேறுபாட்டிற்கு, தமிழகத்தில் முதற்கட்டமாக நிறுவப்படவிருக்கும் சார்ஜிங் நிலையங்கள் முதன்மையாக பைக்குகள், எலக்ட்ரிக் கார்களைக் குறிவைத்து, அவைகளின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப டிசைன் செய்யப்படுவதே முதன்மைக் காரணமாகும். இந்த லிஸ்ட்டில் பஸ்கள், கனரக இ-டிரக்குகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் செலவினம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்த புதிய வசதிகள் மூலம், தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனிமே எந்தவிதமான பயமும் இல்லாமல் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யலாம்.

நடுவழியிலேயே சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற டென்ஷன் பயம் இனி அவர்களுக்கு இருக்காது. அதேபோல சென்னை முதல் நாகர்கோவில் வரையிலான நெடுஞ்சாலைகளில் செல்லும் கார் மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு இந்த திட்டம் ஒரு பெரிய நிம்மதியை தரும். இதுவரை நகரங்களிலும், பெரிய அப்பார்ட்மெண்டுகளிலும் மட்டுமே இருந்த சார்ஜிங் பாயிண்டுகள், இனி தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை கிடைக்கப் போகின்றன.

மின்சார வாகன பயன்பாடு

அதுபோலவே தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் மின்சார வாகன உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக 147 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடர் நடவடிக்கைகள் தென்னிந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சார்ஜிங் வசதி கிடைக்கப் போவதால், தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் பசுமைப் பொருளாதார மாற்றம் இனி வரும் காலங்களில் பல மடங்கு வேகமாய் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அடித்து சொல்கிறார்கள்....!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+