அமலாக்கத் துறையின் அடுத்த குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதாகிறாரா? பரபரப்பு
சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு வேளை அவர் ஆஜராகாவிட்டால் அவரையும் அமலாக்கத் துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் 2ஆவது வாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு, அவருடைய தம்பி அசோக்குமார் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. அது போல் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காததை அடுத்து அவர் கைது செய்யப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனராம். இதையடுத்து சிறிது நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு இதய துடிப்பு சீராக இல்லாததை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனை அல்லது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க அவருடைய மனைவி மேகலா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 7ஆவது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற சில விதிமுறைகளையும் நீதிமன்றம் விடுத்தது. இந்த நிலையில் தற்போது அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அது போல் செந்தில் பாலாஜி தொடர்புடைய மற்றவர்கள் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது தொடர்பாக வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அசோக் குமார் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேளை அவர் நேரில் ஆஜராகாமல் போனால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!











Click it and Unblock the Notifications