Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத் துறையின் அடுத்த குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதாகிறாரா? பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு வேளை அவர் ஆஜராகாவிட்டால் அவரையும் அமலாக்கத் துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் 2ஆவது வாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு, அவருடைய தம்பி அசோக்குமார் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. அது போல் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்தது.

Whether Senthil Balajis brother will be arrested?

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காததை அடுத்து அவர் கைது செய்யப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனராம். இதையடுத்து சிறிது நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு இதய துடிப்பு சீராக இல்லாததை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனை அல்லது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க அவருடைய மனைவி மேகலா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 7ஆவது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற சில விதிமுறைகளையும் நீதிமன்றம் விடுத்தது. இந்த நிலையில் தற்போது அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அது போல் செந்தில் பாலாஜி தொடர்புடைய மற்றவர்கள் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது தொடர்பாக வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அசோக் குமார் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேளை அவர் நேரில் ஆஜராகாமல் போனால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+