திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்? கேசி வேணுகோபால் அளித்த பதில் இதுதான்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர் கேசி வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேசி வேணுகோபால் அளித்த பதிலை காணலாம்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில், விசிக - 2 , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 ,
கே சி வேணுகோபால் பேட்டி: மதிமுக - 1 ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, மக்கள் நீதி மய்யம் - 1 (ராஜ்யசபா சீட் ) ஒதுக்கப்பட்டன. இன்று காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் சென்றனர்.
திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்தது. இதை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக்கொண்டதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நிறைவடைந்தது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கேசி வேணுகோபால் கூறியதாவது:-
காங்கிரசையும் திமுகவையும் பிரிக்க முடியாது: தமிழகத்தில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிக்காக காங்கிரஸ் பாடுபடும். தமிழம் நாட்டிற்கே முன் மாதிரியாக விளங்குகிறது.
பிரித்தாளும் கொள்கை, ஏழை மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்ட அரசு வீழ்ச்சி அடைய வேண்டும். திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நல்ல நட்புறவில் உள்ளது. காங்கிரஸ் - திமுக இடையேயான பிணைப்பு மாறாமல் அப்படியே உள்ளது. தற்போது அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியையும் திமுகவையும் பிரிக்க முடியாது.
எந்தெந்த தொகுதிகளை கேட்டுள்ளீர்கள்: நாங்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் இன்று அளிக்கும் செய்தி இதுதான்" என்றார். அப்போது எந்தெந்த தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த, கேசி வேணுகோபால், "இது குறித்து தமிழக தலைவர்கள் பிறகு ஆலோசித்து முடிவு செய்வார்கள்" என்றார்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications