எந்தப் படிப்புக்கு மவுசு அதிகம்? ஏஐ படிப்புக்கு எதிர்காலம் இருக்கா? தரமான டிப்ஸ்
சென்னை: மாணவர்கள் சிறந்த கல்லூரி படிப்புகளைத் தேர்வு செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளை இரண்டு கல்வியாளர்கள் விவரித்துள்ளனர்.
கல்லூரிச் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி விட்டது. ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர். அவர்கள் இப்போது தெளிவாக முடிவெடுத்து என்ன படிப்பைத் தேர்வு செய்கிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும்.

ஆகவே, ஏதோ ஒரு படிப்புக்கு விண்ணப்பம் போடுவோம் என்ற மனநிலை உள்ளவர்கள் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். எந்தப் படிப்பு சிறந்தது? எதற்கு எதிர்காலம் உள்ளது என்பதைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை வேண்டும்.
ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு பங்குச்சந்தை நிலவரத்தைப் போலக் கல்லூரி படிப்புகளுக்கான மவுசு ஏறிக்கொண்டும், இறங்கிக் கொண்டு உள்ளன. அதற்காகத்தான் இந்த எச்சரிக்கத் தேவை என்கிறோம்.
உதாரணமாகக் கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2251 பேர் மட்டுமே செண்டம் எடுத்திருந்தனர். இந்த நடப்பாண்டில் 6996 பேர் செண்டம் எடுத்துள்ளனர். அதாவது முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆனால், தாவரவியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளில் முழு மதிப்பெண் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. வேளாண் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு எளிதாகவே இடங்கள் கிடைக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.
ஆகவே, பிஏ பொருளாதாரம், பிகாம் ஆகிய படிப்புகளைத் தாண்டி வேறு படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மிக எளிதாக இடங்கள் கிடைக்கும்.
மாணவர்களுக்குள் என்ன படிப்பது? எதற்கு எதிர்காலம் உள்ளது என்பது குறித்து சில குழப்பங்கள் இருக்கலாம். அதற்கான விளக்கங்களை அளிக்கிறார்கள் சில கல்வியாளர்கள்.
முதலில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, “ஒரு மாணவன் 2024இல் ஒரு படிப்பைத் தேர்வு செய்து கல்லூரி உள்ளே செல்லும் போது அவன் படித்து முடித்துவிட்டு 2028இல் வெளியே வரும்போது அன்றைய சூழ்நிலை மிகப் பெரிய அளவில் மாறி இருக்கும்.

அவன் விரும்பி படித்த ஒரு படிப்புக்கு வாய்ப்புகள் குறைந்து போய் இருக்கலாம். அதை ஏன் படிக்க வேண்டும்? இன்றைக்கு இதுதானே அதிகம் பேசப்படும் படிப்பாக உள்ளது என நினைத்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு எதிர்காலமே இல்லை என்றுகூட ஆகியிருக்கலாம்.
ஆகவே, ஒரு படிப்பைத் தேர்வு செய்யும் போது எதிர்காலத்தில் அந்தத் துறைக்கான வேலை வாய்ப்புகள் எந்தளவுக்குப் பிரகாசமாக உள்ளன என்பதை முழுதாக அறிந்து கொண்டு அதில் சேர வேண்டும். யாரோ ஒரு உறவினர் சொல்கிறார் என்பதற்காக ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. இது மிகமிக முக்கியம்.
இன்றைக்கு ஏஐ சார்ந்த படிப்புகள் பலதுறைகளை விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. பலதுறைகளை அது தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டுள்ளது.
இன்றைக்கு ஏஐ மட்டும் படித்துவிட்டேன் என்பது நல்லது அல்ல. அந்த ஏஐ சாந்த தொழில்நுட்பங்களில் எந்த மாதிரியான டூல்ஸ் தெரிந்து வைத்துள்ளோம். எந்த மாதிரியான ப்ளகின்ஸ் தெரிந்து வைத்துள்ளோம் என்பது முக்கியம்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த ஏஐ துறைதான் கோலோச்சப் போகிறது. ஆகவே அதை உணர்ந்து மாணவர்கள் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் பிகாம் படிப்புக்கு கடும் போட்டி இருந்தது. அதைப்போலவே இந்த வருடமும் பிகாம் படிப்புகளில் கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே பிகாம் படிப்பதற்காக இடங்கள் கிடைக்கும். கட்ஆப் மார்க் இந்த ஆண்டு கட்டாயம் கூடும். பிஏ எக்னாமிக்ஸ் போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு கடுமையான போட்டி இருக்கும்.
இந்த வருடம் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது. போட்டியில் அவர்களும் உள்ளார்கள். அரசு அவர்களுக்கு 7% இடஒதுக்கீடு வழங்கி உள்ளது.
அதனால் பிகாம் படிப்புகளில் இன்னும் கூடுதலான போட்டிகள் நிலவ உள்ளன. அதை எல்லாம் மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறையே செய்யும். பெரிய அளவில் போட்டிகள் இருக்காது. மீன்வளம், கால்நடைப் படிப்புகளில் சேர்ந்தால் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்
அடுத்ததாகப் பேசிய கல்வியாளர் அஸ்வின், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 195க்கு மேல் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் இந்த ஆண்டு வேதியியலுக்கான செண்டம் குறைந்துள்ளது. அதன் விளைவாகவே இந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே குறையவும் செய்யாது. ஏறவும் செய்யாது” என்கிறார் இவர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications