Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கம்பெனி இன்சூரன்ஸ்! அதுல பெரிய பிரச்னை இருக்கே! "இதை" நீங்க செய்யணும்! அலர்ட் தரும் ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன உலகில் நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற வேண்டியது கட்டாயமாகிறது. ஐடி தொடங்கிப் பல வேலைகளில் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறோம். இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது.

Who are all need to take medical insurance explains Anand Srinivasan

குறிப்பாக எந்தவொரு உடல் சார்ந்த பணிகளும் இல்லாத நிலையில், முன்பு அரிதாக ஏற்பட்ட இதய பாதிப்பு தொடங்கிப் பல வகை பாதிப்புகள் அடிக்கடி நடக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது மருத்துவமனைகள் பெரும்பாலும் தனியாருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒரு முறை சென்றால் லட்சங்களில் செலவாகிறது.

இன்சூரன்ஸ்: இதனால் இந்த காலத்தில் மருத்து இன்சூரன்ஸ் என்பது ரொம்பவே கட்டாயமாகிறது. இதனிடையே யார் எல்லாம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் வெளிநாட்டில் இருப்போர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது எல்லாம் குறித்து ஆனந்த் சீனிவாசன் வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார். இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் இன்சூரன்ஸ் இருக்கும் நிலையில், இதுபோல காப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிவோர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கார்பரேட் இன்சூரன்ஸ் இருக்கு.. பிறகு நான் ஏன் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனச் சிலர் கேட்பார்கள்.. அது தவறு.. ஏனென்றால் கார்பரேட் இன்சூரன்ஸ் ஓய்வு பெற்ற பிறகு நமக்கு கிடைக்காது.. அதேபோல நம்ம ஊரில் 50 வயதுக்கு மேல் யாராக இருந்தாலும் இன்சூரன்ஸ் கிடைப்பது கடினம்.. எனவே, கார்பரேட் நிறுவனத்தில் வேலை செய்தாலும் கூட 40 வயதில் தனியாக ஒரு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

ஆனந்த் சீனிவாசன்: இப்போது ஒரு சாதாரண இதய பைபாஸ் செய்வது என்றால் கூட குறைந்தது ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது. நமக்கு எதாவது ஆகி மருத்துவமனையில் அட்மிட் ஆனால்.. சொந்தக்காரர்கள் அனைவரும் கஷ்டப்படுவார்கள்.. அது எல்லாம் உண்மைதான்.. ஆனால், குறைந்தது பணத்திற்கு கஷ்டப்படாமல் இருப்பார்கள்.. அதற்காக அலையாமல் இருப்பார்கள்.

வெளிநாட்டிற்குப் போனவர்கள் இங்கே இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கிறார்கள். அதிலும் இரண்டு இருக்கிறது. முதலில் அமெரிக்கா அல்லது ஐரோப்பா போனவர்கள் அங்கேயே செட்டிலாகிவிடுவார்கள். அவர்களுக்கு அங்கேயே இன்சூரன்ஸ் இருக்கும்.

Who are all need to take medical insurance explains Anand Srinivasan

வெளிநாடுகளில் இருப்போர்: அதேநேரம் மற்றொரு புறம் சவுதி, அரபுநாடுகள், சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்பிற்கான அனுமதி இல்லாதவர்களுக்கு வேறு.. அங்கு வேலை செய்யும் வரை அவர்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கும்.. வேலை முடிந்து இங்கு வந்தால் இன்சூரன்ஸ் இருக்காது. 60 வயதில் வேலையில் இருந்து ஓய்வுபெற்று வரும் போது இன்சூரன்ஸ் தேவைப்படும்.. அப்போது நம்மால் இங்கு இன்சூரன்ஸ் வாங்கவும் முடியாது.

எனவே அரபு நாடுகளில் இருப்போர் கடைசிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆவது போல இருந்தால் அவர்களும் மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும்.. எவ்வளவு குறைவான வயதில் எடுக்கிறார்களோ.. அவ்வளவு நல்லது வரும் போது பெட்டராக இருக்கும்..

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காப்ரேட் இன்சூரன்ஸ் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வேலை செய்வோர் கடைசிக் காலத்தில் இந்தியாவுக்கு வருவது போல இருந்தாலும் அவர்கள் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்.. முதலீடு எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு இன்சூரன்ஸும் முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+