ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்தாங்க ரூ 3 லட்சம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ 50 ஆயிரம் வைப்புத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், இதை பெற விண்ணப்பிப்பது எப்படி? இந்த தொகை எதற்காக வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த திட்டத்தின் பெயர் முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். இது 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ரூ 50 ஆயிரம் அல்லது தலா ரூ 25 ஆயிரம் நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) செலுத்துகிறது.
முன்னாள் மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்", பெண் குழந்தைகளின் நலனுக்கான ஒரு முன்னோடி மற்றும் যুগப்புரட்சிகரமான திட்டமாகும். இத்திட்டமானது, அரசாங்கத்தின் நேரடி முதலீடு மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்வதையும், தொடர்ந்து கல்வி கற்பதையும் ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் அவர்கள் மேல்நிலைக் கல்வி (Intermediate level) வரையாவது படிப்பதை உறுதி செய்தல்.
பெண்கள் 18 வயது பூர்த்தியடைந்த பிறகே திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தல்.
இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல்.
பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்குச் சமூக மற்றும் நிதி ரீதியான அதிகாரமளித்தலை (Financial empowerment) வழங்குதல்.
பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கினை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை ஆகும்.
இந்த திட்டத்தில் பயன்பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது. பெற்றோர் 40 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருத்தல் வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 1.20 லட்சத்தை தாண்டக் கூடாது. குழந்தை 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவர்களாகவோ இருக்க வேண்டும்.
ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அவரது பெயரில் ரூ 50000 வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படும். ஒரு வேளை இரு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ 25 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
6ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரூ 1800 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அது போல் அந்த குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ 3 லட்சம் வரை முதிர்வு தொகை கிடைக்கும்.
விண்ணப்பதாரர்கள் பின்வரும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்:
வருமானச் சான்றிதழ் (Income Certificate)
இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate)
ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் (No male child Certificate)
பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate of Girl Children)
குடும்பக் கட்டுப்பாடு / கருத்தடை அறுவை சிகிச்சை சான்றிதழ் (Sterilization certificate)
குடும்ப அட்டை / ரேஷன் கார்டு (Ration Card)
தாய் மற்றும் தந்தையின் வயதுச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Age certificate / TC of father & mother)
சாதிச் சான்றிதழ் (Community Certificate)
இதனை இ-சேவை மையம் (e-sevai centre) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதன் ஒரு நகலைச் சென்னை மாவட்ட சமூக நல அலுவலரிடம் (DSWO, Chennai) சமர்ப்பித்து, அசல் ஆவணங்களுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications